Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அப்பா டி.ஆரை கலாய்ப்பவர்களை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய சிம்பு
Recommended Video
சென்னை: தன் அப்பாவை கிண்டல் செய்பவர்களை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார் சிம்பு.
சரிகமப நிகழ்ச்சியில் டி. ராஜேந்தர் நடுவர்களில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவரை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு சிம்பு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
சிம்பு பேசிய வீடியோ அந்த நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டது. அப்பா பற்றி சிம்பு கூறியிருப்பதாவது,
அனுபவசாலி
சரிகமப நிகழ்ச்சியில் என் அப்பா இருக்கிறார். எங்க அப்பா பற்றி பேச வேண்டும் என்றால் திறமைசாலி, அனுபவசாலியான மனிதரை பார்த்து சிலர் கிண்டல் செய்வதை பார்க்கும்போது எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கும்.
மியூசிக்
கிண்டல் செய்வது யார் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வாயிலேயே மியூசிக் போடுகிற ஆளு என்று சொல்வான், கிண்டல் செய்வான். உன்னால் வாயில மியூசிக் போட முடியாது அல்லவா அதனால் நீ கிண்டல் பண்ற.
20 வயது
தலைமுடியை இப்படி இப்படி வைத்து தலையை ஆட்டுற. இந்த வயதிலும் அவருக்கு முடி இருக்கு. உனக்கு 20 வயதிலேயே முடி போயிடுது. அதனால் அவரை கலாக்கிற.
மனைவி
எந்த பெண்ணை பார்த்தாலும் உனக்கு ஒரு மாதிரி தோன்றும். ஆனால் ஒரே பெண் ஒரே மனைவி என்று கட்டுப்பாடோடு அவர் வாழ்கிறார். அதை பார்த்தால் நீ கிண்டல் தான் பண்ணுவ.
கெட்டப் பழக்கம்
ஏதாவது ஒரு போதைக்கு அடிமையாக இருப்ப. அப்படி இருக்கும்போது எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமல் வாழ்வதை பார்த்தால் கிண்டல் பண்ணத்தான் உங்களுக்கு தோன்றும்.
நன்றி
நமக்கு எதுமே வராது என்கிறவன் தான் கிண்டல் பண்றான். இதற்கிடையே சிலர் நமக்கு திறமை இல்லை என்றாலும் இருக்கிறவனை மதிக்க வேண்டும் என்று நினைத்து அவரை மதித்ததால் தான் அவர் இன்று இந்த இடத்தில் இருக்கிறார். அந்த நல்ல உள்ளங்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.