மாநாட்டில் நிறுத்தாமல் கண்ணீர் விட்டு அழுத சிம்பு...காரணம் என்னன்னு தெரியுமா ?
சென்னை : ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்புவின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது மாநாடு படத்திற்காக தான். வெங்கட் பிரபு இயக்கி உள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சையின்ஸ் - ஃபிக்ஸிங் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் சிம்புவிற்கு ஜோடியாக, சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் அறிமுகமான கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, ஒய்ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

உரிமத்தை வாங்கிய யுவன்
சமீபத்தில் வெளியிடப்பட்ட முதல் சிங்கிள் பாடலான மெஹரிஜைல்லா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலை யுவன்சங்கர் ராஜாவே இசையமைத்து பாடி உள்ளார். இந்த படத்தின் மியூசிக் உரிமத்தையும் யுவனே வாங்கி உள்ளார்.

அனுபவத்தை பகிர்ந்த சிம்பு
இந்த பாடல் வெளியீட்டின் போது ட்விட்டர் ஸ்பேசில் நேரடியாக படக்குழுவினர் பங்கேற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் படத்தில் தங்களின் அனுபவங்கள் பற்றி படக்குழுவினர் பேசினர். இதில் ஹீரோவான சிம்புவும் பங்கேற்றார்.

அடி வாங்கி இருக்கேன்
அப்போது பேசிய சிம்பு, முக்கியமான சீன்கள் ஒரே டேக்கில் படமாக்கப்பட்டன. இதற்காக டைரக்டர் வெங்கட் பிரபுவிற்கு நன்றி. சின்ன வயதில் நடிக்க வந்த போது எமோஷனல் சீன்களில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். கண்ணில் கண்ணீர் வருவதற்காக அடி கூட வாங்கி இருக்கேன்.
Recommended Video

கண்ணீரை அடக்க முடியவில்லை
ஆனால் தற்போது நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்ட பிறகு, எமோஷனல் சீன்களில் நடிப்பது கேக் பீஸ் சாப்பிடுவது போல் உள்ளது. இன்னும் சொல்லப் போனால் அந்த சீன்களில் நடித்து முடித்த பிறகும் கண்ணீரை அடக்க முடியவில்லை என்றார்.

அக்டோபர் ரிலீஸ்
மே மாதமே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது அக்டோபர் மாதம் தியேட்டரில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











