Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கல்யாணம் நடக்க பூஜை செய்தாரா சிம்பு...இணையத்தை கலக்கும் போட்டோக்கள்
வாரணாசி : சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு, சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பி உள்ளார் சிம்பு. அதிகம் எதிர்பார்க்கப்படும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள மாநாடு படத்தின் டீசர், சமீபத்தில் சிம்புவின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.
சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு வெளியிடும் போட்டோக்கள், வீடியோக்கள் என அனைத்தும் வைரலாகி வருகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு, தனக்கு சீக்கிரம் திருமணம் ஆக வேண்டும் என நாயுடன் பேசி அவர் வெளியிட்ட வீடியோவையும் சிம்பு ரசிகர்கள் வைரலாக்கினர்.
இந்நிலையில், தற்போது வாரணாசி சென்றுள்ள சிம்பு, அங்கு படகில் சென்று, கங்கை நதியில் விளக்குகளை மிதக்க விட்டு சிறப்பு பூஜை செய்துள்ளார். இந்த போட்டோக்களை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
எதையும் வெளிப்படையாக பேசும் சிம்பு, இது பற்றி எந்த கருத்தும் கூறவில்லை. அதற்கு பதிலாக புதிய ஆண்டு நன்றாக அமைய வேண்டும் என்று மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் இந்த போட்டோவை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.