Don't Miss!
- News அரசு பேருந்து கண்டக்டர் பறந்து விழுந்த விவகாரம்.. "அதிமுக ஆட்சி தான் காரணம்".. சொல்வது அமைச்சர்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நள்ளிரவில் தனுஷ், சிம்பு, பாடகி சுசித்ரா கலாட்டா... நடந்தது என்ன?
கோலிவுட்டில் பிரபலங்களின் இரவு பார்ட்டிகள் என்றாலே அது ஏதாவது கலாட்டாவில் முடிந்து மறுநாள் கிசுகிசு அல்லது பரபர செய்தியாகிவிடுவது வழக்கம். குறிப்பாக சிம்பு, தனுஷ், வெங்கட் பிரபு கேங், விஜய் சேதுபதி பார்ட்டிகள் அப்படித்தான் முடியும்.
கொஞ்ச நாட்களாக இந்த ராக்கூத்துகள் பற்றி செய்தி இல்லாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளதை பாடகி சுசித்ராவின் ட்வீட்டுகள் அம்பலப்படுத்தியுள்ளன. ஆனால் என்ன நடந்தது என்பதை முழுமையாக அவர் சொல்லவில்லை.
நள்ளிரவு 1 மணிக்கு தனுஷ், சிம்பு, சுசித்ரா போன்றவர்கள் ஏதோ விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனுஷும் அவர் கேங்கும் சுசித்ராவின் கையைரத்தம்கட்டிப் போகும் அளவுக்கு முரட்டுத்தனமாக இழுத்துள்ளார்கள். அதை தனுஷ் தடுக்கவே இல்லையாம். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். சிம்புவும் இதற்கு சாட்சியாம். தான் தாக்கப்பட்டபோது யாரும் உதவி செய்ய வேண்டாம் என தனுஷ் கூறிவிட்டாராம்.
இதையெல்லாம் ட்விட்டரில் புலம்பியுள்ள சுசித்ரா, ரத்தம் கட்டிப் போயுள்ள தன் கையை படமெடுத்து வெளியிட்டுள்ளார்.
நள்ளிரவு ஒரு மணிக்கு, பார்கள் கூட இருக்காது. அந்த நேரத்தில் இவர்கள் மூவரும் என்ன செய்தார்கள்? எதற்காக மோதல் நடந்து, அடிதடி வரை போனது? காவல் துறை விசாரிக்கலாமே!