Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மகத் -மனோஜ் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பஞ்சாயத்தில் குதித்தார் சிம்பு !
மங்காத்தாத படத்தில் நடிகர்களோடு நடிகராக நடித்த ஒருவர் மகத். இவரது பெயரும், முகமும் தமிழக மக்களில் எத்தனை பேருக்கு சரியாக நினைவருக்கும் என்பதே தெரியவில்லை. அதற்குள் தண்ணிப் பார்ட்டி, காதல், கலாட்டா, கட்டிப்புரண்டு சண்டை என்று பெரிய ரேஞ்சுக்குப் போய் விட்டார் இந்த சின்ன நடிகர்.
அதேபோல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு. இவரது பெயர் கலாட்டாவுக்குப் பின்னர்தான் தமிழக மக்களுக்கேத் தெரிய வந்துள்ளது. மேலும் இவர் மோகன்பாபுவின் மகன் என்பதும் கூட இப்போதுதான் பலருக்கும் புரிந்திருக்கிறது. இப்படிப்பட்ட இந்த இரு நடிகர்களும் சேர்ந்து குடித்து விட்டு போட்ட ஒரு காதல் சண்டையால் கோலிவுட்டே நாறிப் போய்க் கிடக்கிறது.
சினிமாக்காரர்கள் ஒரு இடத்தில் கூடினாலே தண்ணிதான், சண்டைதான், காதல்தான், கலாட்டாதான் என்ற நிலையை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது மகத்துக்கும், மனோஜுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வர நடிகர் சிம்பும் களம் இறங்கியுள்ளாராம். இருவருக்கும் அவர் நெருங்கிய நண்பராம். இதனால் இருவரிடமும் தொடர்ந்து பேசி வருகிறாராம். இவரது பஞ்சாயத்துப் பேச்சுவார்த்தைக்குப் பலன் ஏதும் கிடைத்ததா என்பது குறித்துத் தகவல் இல்லை.