Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
“இப்போதைக்கு திருமணம் பற்றி எந்த திட்டமும் இல்லை”.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு!
தனது திருமணம் பற்றி ஊடகங்களில் பரவிய செய்திக்கு சிம்பு விளக்கமளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தனது திருமணம் மற்றும் புதிய படங்கள் குறித்து அறிக்கை வாயிலாக விளக்கம் அளித்துள்ளார் நடிகர் சிம்பு.
காதல், திருமணம், புதிய படம் என ஏதாவது ஒரு வகையில் சிம்புவின் பெயர் ஊடகங்களில் அடிபட்ட வண்ணம் தான் உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமா உலகில் சமீபகாலமாக தவிர்க்க முடியாத கேள்வியாக உள்ளது, 'சிம்புவின் திருமணம் எப்போது?’ என்பது. அதுவும் குறளரசனின் திருமணத்திற்குப் பிறகு இந்தக் கேள்வியின் தீவிரம் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில், சிம்புவிற்கு வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று ஒரு தகவல் வைரலானது. உறவினர் பெண் ஒருவரை அவர் மணமுடிக்க திட்டமிட்டிருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால், அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. காரணம் இது உண்மையில்லை, வதந்தி என சிம்பு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
என்னதிது.. ஹாலிவுட்ல இருந்து இப்படி படை எடுக்கிறாங்களே!
ஊடக பிணைப்பு:
அதில், ‘என்னுடைய பயணம் மற்றும் ஊடகங்களுடனான பிணைப்பு என்பது நீண்ட காலமானது. என்னுடைய சினிமா வாழ்க்கையைத் தாண்டி ஊடகங்கள் என்னுடைய வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது. ஒருவேளை ஊடகங்களில் பங்களிப்பு இல்லாமல் இருந்தால், என்னால் லட்சக்கணக்கான குடும்பங்கள் என்னை அவர்களது சொந்த சகோதரராகவும் மகனாகவும் நினைத்திருக்க மாட்டார்கள்.
திருமண வதந்திகள்:
என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் பாதகமான நிலைக்குச் சென்றிருந்த காலத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்த ஊடகங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றியும், என்னுடைய சினிமா வாழ்க்கைப் பற்றியும் ஏராளமான வதந்திகள் இருக்கின்றன என்பது வெளிப்படையானது. குறிப்பாக, என்னுடைய திருமணம் குறித்து வதந்திகள் பரவுகின்றன.
நானே தெரிவிப்பேன்:
தற்போது திருமணம் குறித்து எந்த திட்டமும் இல்லை என்பதை விளக்கிக் கொள்கிறேன். அதற்கான உரிய நேரத்தில் இதுகுறித்து நானே தெரிவிப்பேன். என்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும் நிறைய வதந்திகள் பரவுகின்றன. ஒரு சினிமா நடிகராக பல தயாரிப்பாளர்களை, இயக்குநர்களை சந்திக்கவேண்டி இருக்கும். இது இணைந்து படம் இயக்குவதற்கு என்று இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
மனச்சோர்வு:
இத்தகைய வதந்திகளால் என்னுடைய ரசிகர்கள் ஏமாற்றம் மற்றும் மனச்சோர்வு அடைகின்றனர். நான் உறுதியாக இருப்பதற்கு என்னுடன் இணைந்து நிற்கும் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்' என இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.