Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பாடாத சிம்பு நிறுத்திடு... கோச்சடையான் கிராஃபிக்சை விமர்சித்ததற்கு சவுந்தர்யா பதிலடி
சென்னை: நடிகர் சிம்புவிடம் தயவு செய்து பாட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார் கோச்சடையான் பட இயக்குநரான சவுந்தர்யா ரஜினிகாந்த்.
ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த், தனது தந்தையை வைத்து 3டி படமான கோச்சடையானை இயக்கியுள்ளார். இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் மோஷன் கேப்சர் என்ற புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளார் சவுந்தர்யா.
இதன்மூலம், அப்படத்தில் பல புதுமைகளைச் செய்துள்ளார் சவுந்தர்யா. இதனால் அப்படத்திற்கு மக்களிடையே பலத்த வரவேற்பு உள்ளது.
சிம்புவின் கருத்து...
ஆனால், கோச்சடையான் படத்தைப் பார்த்த நடிகர் சிம்பு, ‘படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை' என டிவிட்டரில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
அந்த 5 கேள்விகள்...
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடியில் கலந்து கொண்டார் சவுந்தர்யா ரஜினிகாந்த். அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, 'ஐந்து பேரிடம் நீங்கள் கேட்க விரும்புகிற கேள்வியை கேட்கலாம்' எனக் கூறினார்.
பாடாத சிம்பு...
அதில் ஒன்றாக ‘நடிகர் சிம்புவிடம் என்ன கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சவுந்தர்யா. 'பாடாத சிம்பு, நிறுத்திடு' என்றார்.
பதிலடி...
கோச்சடையான் படத்தை சிம்பு விமர்சித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தற்போது இவ்வாறு சவுந்தர்யா பதிலளித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.