Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு!
சென்னை: சர்க்கார் திரைப்பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் நேரில் விவாதிக்க தயார் என சிம்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு, வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பெயர் மாநாடு என வைக்கப்படுள்ளது. எ வெங்கட்பிரபு பொலிட்டிகல் ஜர்னி என்ற சப் டைட்டிலுடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பல வருடங்களாகடி.ராஜேந்தர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சிம்புவும் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். இவற்றை எல்லாம் தொடர்பு படுத்தி பார்க்கும்போது, மாநாடு என்ற திரைப்படம் மூலம் சிம்பு அரசியலுக்கு வர அடிக்கோடிடுகிறார் என நெட்டிசன்கள் கருத்து சொல்ல ஆரம்பித்தனர்.
இதுகுறித்து விளக்கமளிக்கும் விதமாக சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களாக தான் ஆசைப்பட்ட கூட்டணி அமைந்ததற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Exclusive : #STR speaks about #Maanaadu & the response for the title. He repeats that he is not interested in politics & has no political aspiration. Also he talks in support of film #SARKAR !#Simbu #STRMaanaadu #STRVp pic.twitter.com/YFeZaV51EY
— Deepu (@DEEPU_S_GIRI) July 10, 2018
படம் நன்றாக வரும் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த சிம்பு, சர்க்கார் திரைப்பட பிரச்சனை குறித்து பேச ஆரம்பித்தார். அவ்வப்போது திரைப்படங்களுக்கு பிரச்சனை வருவதாகவும், அன்று பாபா முதல் இன்று சர்க்கார் வரை ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்துக்கொண்டே இருக்கிறது என்றும் கூறினார்.
இதுதொடர்பாக பேச பாமக தலைவர் அன்புமணி அழைத்தால் பொதுமேடையில் அமர்ந்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும், அப்படி செய்வதன்மூலம் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்கமுடியும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.