Don't Miss!
- Finance CHATGPT முதல் இந்திய ஊழியரை நியமித்தது.. யார் இந்த பிரக்யா மிஸ்ரா..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு!
சென்னை: சர்க்கார் திரைப்பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் நேரில் விவாதிக்க தயார் என சிம்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு, வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பெயர் மாநாடு என வைக்கப்படுள்ளது. எ வெங்கட்பிரபு பொலிட்டிகல் ஜர்னி என்ற சப் டைட்டிலுடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
பல வருடங்களாகடி.ராஜேந்தர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சிம்புவும் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். இவற்றை எல்லாம் தொடர்பு படுத்தி பார்க்கும்போது, மாநாடு என்ற திரைப்படம் மூலம் சிம்பு அரசியலுக்கு வர அடிக்கோடிடுகிறார் என நெட்டிசன்கள் கருத்து சொல்ல ஆரம்பித்தனர்.
இதுகுறித்து விளக்கமளிக்கும் விதமாக சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களாக தான் ஆசைப்பட்ட கூட்டணி அமைந்ததற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Exclusive : #STR speaks about #Maanaadu & the response for the title. He repeats that he is not interested in politics & has no political aspiration. Also he talks in support of film #SARKAR !#Simbu #STRMaanaadu #STRVp pic.twitter.com/YFeZaV51EY
— Deepu (@DEEPU_S_GIRI) July 10, 2018
படம் நன்றாக வரும் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த சிம்பு, சர்க்கார் திரைப்பட பிரச்சனை குறித்து பேச ஆரம்பித்தார். அவ்வப்போது திரைப்படங்களுக்கு பிரச்சனை வருவதாகவும், அன்று பாபா முதல் இன்று சர்க்கார் வரை ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்துக்கொண்டே இருக்கிறது என்றும் கூறினார்.
இதுதொடர்பாக பேச பாமக தலைவர் அன்புமணி அழைத்தால் பொதுமேடையில் அமர்ந்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும், அப்படி செய்வதன்மூலம் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்கமுடியும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.