Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீண்டும் தள்ளிப் போன மாநாடு ஷூட்டிங்.. இந்த கடைசி நேர மாற்றத்துக்கு என்ன காரணம் தெரியுமா?
சென்னை: மாநாடு படத்தில் இருந்து நடிகர் சிம்புவையே மாற்றலாம் என்ற அளவுக்கு சென்ற பிரச்சனை எல்லாம் தற்போது சுமூகமாக தீர்ந்து, கடந்த வாரம் பூஜையும் போடப்பட்டது.
Recommended Video
மாநாடு படத்தின் ஷூட்டிங் இன்று ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில், சிம்புவின் மாநாடு ஷூட்டிங் மீண்டும் தள்ளிப் போயுள்ளது.
டிராப் ஆனது
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் அரசியல் படமாக மாநாடு உருவாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஷூட்டிங்குக்கு சிம்பு சரியாக வரவில்லை போன்ற காரணங்களை காட்டி, தயாரிப்பு தரப்புக்கும், சிம்புவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால், படமே டிராப் ஆகும் நிலைக்கு வந்தது.
சமரசம்
பின்னர், சிம்புவின் அம்மா, தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் மாநாடு படம் ஆரம்பமாகும் என்ற அறிவிப்பும், படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் குறித்த அறிவிப்புகளும், தொடர்ச்சியாக வெளியாகி சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தன.
டிரெண்டான பூஜை
தனுஷின் டி40 படத்தின் அறிவிப்பு மற்றும் அஜித்தின் Get Well Soon Ajith என்ற ஹாஷ்டேக் மத்தியில், சிம்புவின் மாநாடு பூஜை மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. நடிகர், இயக்குநர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பூஜையில் கலந்து கொண்டனர்.
தள்ளிப் போனது
மாநாடு படத்தின் ஷூட்டிங் இன்று, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில், இன்று ஷூட்டிங் நடைபெறவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஹைதராபாத் ஷூட்டிங்கிற்கு முன்னதாக சென்னையில் ஷூட்டிங் நடத்தவும் படக்குழு முடிவு செய்துள்ளது.
சென்னையில்
சிம்பு ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மாநாடு படம் மாஸாக உருவாகும் என்றே தெரிகிறது. சென்னையில், உள்ள விஜிபி கோல்டன் பீச்சில் நாளை முதல் 9 நாட்களுக்கு பாடல் காட்சி ஒன்றை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதற்கான அரங்குகள் அமைக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
உங்களுக்காக நான்
சமீபத்தில், கல்லூரி விழா ஒன்றுக்கு மாநாடு பட கெட்டப்பில் சென்ற சிம்பு, உங்களுக்காக நான் இனி தொடர்ந்து நடிப்பேன் என்றும், தான் விட்ட இடத்தை விட பெரிய இடத்தை பிடிப்பேன் என்றும், ரசிகர்கள் மத்தியில் பேசி இருந்தார். சிம்புவின் பேச்சு சிம்பு ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி, மாநாடு படத்திற்காக காத்திருக்க வைத்துள்ளது.