வாலு படத்திற்கும் வருது தலைப்பு சிக்கல்?'
தமிழ்திரைப்பட தலைப்புகளுக்கு சிக்கல் வருவது அதிகமாகிவருகிறது. துப்பாக்கி, சுந்தரபாண்டியனைத் தொடர்ந்து சிம்பு நடித்து வரும் வாலு படத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரணவ் புரடெக்சன்ஸ் ஏற்கனவே வாலு என்ற படத்தை பதிவு செய்து அகில் ஹீரோவாகவும், சரண்யா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு படப்பிடிப்பு தண்டராம்பட்டு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தம்பி ராமையாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தெய்வசிகாமணி என்பவர் இயக்கி வருகிறார். இந்த நிறுவனத்தினர்தான் சிம்புவின் வாலுவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த பஞ்சாயத்தினால் சிம்புவின் 'வாலு' வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக இது போன்ற தலைப்புப் பிரச்சனைகளும், பஞ்சாயத்துகளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் தயாரிப்பாளர் சங்கம் ஒழுங்காக வேலை செய்யவில்லையோ என்று கேள்வி எழுந்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications
