Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எனக்கே இந்த நிலைமைன்னா, ரஜினி, கமலுக்கு சொல்லவா வேண்டும்?: சிம்பு
Recommended Video
சென்னை: எனக்கே இந்த நிலைமை என்றால் ரஜினி, கமலுக்கு சொல்லவா வேண்டும் என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து காவிரி நீரை தமிழகத்துடன் பகிர்ந்து கொள்ள தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பதை நிரூபிக்குமாறு சிம்பு கேட்டுக் கொண்டார்.
அவரின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மக்களும் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
கமல்
அரசியலில் இல்லாத சிம்பு இப்படி ஒரு அருமையான காரியத்தை செய்துள்ளார். அரசியலில் இருக்கும் கமல் ஹாஸனும், பாதி அரசியல்வாதியான ரஜினியும் ஏன் இப்படி எதுவும் செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இது குறித்து சிம்பு பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
பேட்டி
சிம்பு பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கர்நாடக மக்கள் கெட்டவர்கள் இல்லை. மக்களின் பெயரை வைத்து காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகள் உருவாக்கியுள்ள பிம்பத்தை உடைக்க நினைத்தேன். அரசியலுக்குள் இருக்கும் அரசியலை வெளியேற்ற வேண்டும் என்றார்.
கேள்வி
சிம்பு மாதிரி ரஜினி, கமல் ஏன் சொல்லவில்லை என்று கேட்பதே தவறு. நான் சொன்னதற்கு நான் தமிழனே இல்லை என்றார்கள். தமிழ் தமிழ் என்று சொல்லும் நான், சிலம்பரசன் என்று பெயர் வைத்திருக்கும் நான், டி. ராஜேந்தர் மகனாக பிறந்த நான், ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுக்க வேண்டும் என சொன்ன எனக்கே இந்த நிலைமை என்றால் அவர்களை சொல்லவா வேண்டும் என்றார் சிம்பு.
இந்தியன்
நீங்க தமிழனா என்று கேட்கிறார்கள், எனக்கு தெரியலப்பா. நான் இந்தியனா என்று கேள்வி எழுப்புறீங்க, எனக்கு தெரியலப்பா. ஆனால் ஒரு விஷயம் எனக்கு நன்கு தெரியும், நான் மனிதன். அது இல்லன்னு நிரூபித்தால் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்று சிம்பு கூறினார்.
அரசியல்
நான் கமல் சார் கட்சியும் கிடையாது, ரஜினி சார் கட்சியும் கிடையாது. அவர்களால் அந்த விஷயத்தை எடுத்துச் சொல்ல முடியாது. ஏனென்றால் உடனே அரசியல் பக்கம் திருப்புவார்கள். அரசியலாக்கிவிடுவார்கள் என்று சிம்பு தெரிவித்தார்.