Don't Miss!
- News துபாயை மொத்தமாக புரட்டிப்போட்ட கனமழை.. "மேக விதைப்பு" காரணமா? தமிழ்நாடு வெதர்மேன் பரபர விளக்கம்
- Lifestyle இந்த முகலாய அரசர் வாழ்க்கை முழுக்க கங்கை நீரை மட்டும்தான் குடிச்சாராம்... அதுக்கான வினோத காரணம் என்ன தெரியுமா?
- Finance இப்படியொரு திட்டம் இருப்பது தெரியுமா?! இதுல மட்டும் முதலீடு செய்யுங்கள்.. பணம் கொட்டும்..!
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விஆர்வி பார்க்க தியேட்டருக்கு போகிறீர்களா?: உங்களுக்கு ஒரு சர்பிரைஸ்
Recommended Video
சென்னை: வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நாளை வெளியாக உள்ளது.
இந்த படத்தின் அதிகாலை காட்சி 5 மணிக்கு திரையிடப்படுகிறது.
வந்தா ராஜாவாதான் வருவேன்
சென்னையில் உள்ள ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸில் உள்ள அனைத்து ஸ்கிரீன்களிலும் நாளை காலை 5 மணிக்கு வந்தா ராஜாவாதான் வருவேன் படம் திரையிடப்பட உள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சிம்பு
நாளை வந்தா ராஜாவாதான் வருவேன் படம் ரிலீஸாகும் தியேட்டர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளாராம் சிம்பு. அவர் ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸ், காசி தியேட்டர், ஜிகே சினிமாஸ் உள்ளிட்ட தியேட்டர்களுக்கு செல்ல உள்ளாராம்.
எஸ்டிஆர்
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களுக்கு சிம்புவை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பு
வந்தா ராஜாவாதான் வருவேன் குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக எடுக்கப்பட்டுள்ளது. சிம்புவின் கோரிக்கையை ஏற்று அவரின் ரசிகர்கள் யாரும் நாளை பேனர்கள், கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.