Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
சென்னை : விஜய் டிவி.,யின் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி, கிராண்ட் பினாலேவாக ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி 5 மணி நேர மெகா ஷோவாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியின் டைட்டிலை டைரக்டர் அகத்தியனின் மகள் கனி வென்றார்.
Recommended Video
மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக அப்பா, மகனுடன் மரக்கன்று நட்ட பிரபல நடிகர்!
அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேயின்போது சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார். அப்போது கனியிடம் உங்கள் கார குழம்பை சாப்பிட நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறினார். கனி வைக்கும் காரக்குழம்பை இந்நிகழ்ச்சியில் பலரும் கலாய்த்தனர்.
கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பங்கேற்று பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட, கனியை காரக்குழம்பை வைத்து வைத்து கலாய்த்தார். அந்த அளவிற்கு கனியின் காரக்குழம்பு பிரபலமாகி விட்டது. கனியின் காரக்குழம்பிற்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவாகி விட்டது என சொல்லலாம்.
காரக்குழம்பு சாப்பிட்ட சிம்பு
இந்நிலையில், சிம்பு, மகத் மற்றும் ரக்ஷன் ஆகிய மூவரும் கனியின் வீட்டிற்கு சென்று அவருடைய காரக்குழம்பை ரசித்து சாப்பிட்டுள்ளனர். இதுகுறித்து கனியின் கணவர் இயக்குனர் திரு தனது டுவிட்டரில் 'சிம்பு, மகத் மற்றும் ரக்ஷன் ஆகிய மூவரும் தங்களுடைய வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி என்றும், அவர்களது வருகை மிகுந்த ஆச்சரியம் அளித்தது என்றும், கனியின் காரக்குழம்பை அவர்கள் சாப்பிட்டு ரசித்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையில்லை
இந்த ஃபோட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கனி, மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளில்லை. நிரம்ப நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார். நடிகர் மகத்தும் இதை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, எனது காதல் கண்டிஷன் அப்ளை பட சூட்டிற்கிற்கு இடையேயும், சிம்புவின் மாநாடு பட வேலைகளுக்கு நடுவிலும் கனி திருவின் சமையலை ருசிக்க வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான சாப்பாடு. இதற்காக நன்றி என தெரிவித்துள்ளார்.
வைரலாகும் ஃபோட்டோக்கள்
இவர்கள் அனைவரும் மாறி மாறி சமூக வலைதளங்களில் இந்த ஃபோட்டோக்களை பகிர்ந்ததால் இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அதுவும் காரக்குழும்பு சாப்பிடுவதற்காக கனி வீட்டிற்கு சிம்பு சென்றதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.