Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
காரக் குழம்பு சாப்பிட கனி வீட்டிற்கு சென்ற சிம்பு...வைரலாகும் ஃபோட்டோ
சென்னை : விஜய் டிவி.,யின் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி, கிராண்ட் பினாலேவாக ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி 5 மணி நேர மெகா ஷோவாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியின் டைட்டிலை டைரக்டர் அகத்தியனின் மகள் கனி வென்றார்.
Recommended Video
மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக அப்பா, மகனுடன் மரக்கன்று நட்ட பிரபல நடிகர்!
அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேயின்போது சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார். அப்போது கனியிடம் உங்கள் கார குழம்பை சாப்பிட நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறினார். கனி வைக்கும் காரக்குழம்பை இந்நிகழ்ச்சியில் பலரும் கலாய்த்தனர்.
கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரஹ்மான்
சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோட்டில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் பங்கேற்று பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட, கனியை காரக்குழம்பை வைத்து வைத்து கலாய்த்தார். அந்த அளவிற்கு கனியின் காரக்குழம்பு பிரபலமாகி விட்டது. கனியின் காரக்குழம்பிற்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவாகி விட்டது என சொல்லலாம்.
காரக்குழம்பு சாப்பிட்ட சிம்பு
இந்நிலையில், சிம்பு, மகத் மற்றும் ரக்ஷன் ஆகிய மூவரும் கனியின் வீட்டிற்கு சென்று அவருடைய காரக்குழம்பை ரசித்து சாப்பிட்டுள்ளனர். இதுகுறித்து கனியின் கணவர் இயக்குனர் திரு தனது டுவிட்டரில் 'சிம்பு, மகத் மற்றும் ரக்ஷன் ஆகிய மூவரும் தங்களுடைய வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி என்றும், அவர்களது வருகை மிகுந்த ஆச்சரியம் அளித்தது என்றும், கனியின் காரக்குழம்பை அவர்கள் சாப்பிட்டு ரசித்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையில்லை
இந்த ஃபோட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கனி, மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளில்லை. நிரம்ப நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார். நடிகர் மகத்தும் இதை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, எனது காதல் கண்டிஷன் அப்ளை பட சூட்டிற்கிற்கு இடையேயும், சிம்புவின் மாநாடு பட வேலைகளுக்கு நடுவிலும் கனி திருவின் சமையலை ருசிக்க வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான சாப்பாடு. இதற்காக நன்றி என தெரிவித்துள்ளார்.
வைரலாகும் ஃபோட்டோக்கள்
இவர்கள் அனைவரும் மாறி மாறி சமூக வலைதளங்களில் இந்த ஃபோட்டோக்களை பகிர்ந்ததால் இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அதுவும் காரக்குழும்பு சாப்பிடுவதற்காக கனி வீட்டிற்கு சிம்பு சென்றதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.