Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிம்புதேவன் பெயரைக் கேட்டதும் தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்
வடிவேலுவை ஹீரோவாக வைத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை எடுத்து புகழ் பெற்றவர் இயக்குனர் சிம்புதேவன். அவர் இம்சை அரசன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். இதிலும் வடிவேலுவை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை அணுகினார். அப்போது வடிவேலு இடியாப்ப சிக்கலில் இருந்ததால் வேறு யாரையாவது நடிக்க வைக்குமாறு தெரிவித்துவிட்டார்.
சிம்புதேவனும் பல ஹீரோக்களை அணுகியும் பலனில்லை. இந்நிலையில் வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளார். உடனே அவரிடம் சென்று மீண்டும் கேட்டதற்கு அந்த கதை லேட்டஸ்ட் டிரெண்ட்டில் இல்லை நான் யுவராஜ் கதையில் நடிக்கப் போகிறேன் என்று வடிவேலு தெரிவித்துவிட்டாராம். இதையடுத்து சிம்புதேவன் தனது சிஷ்யன் இயக்குனர் பாண்டிராஜ் மூலம் சிவகார்த்திகேயனிடம் கதை சொல்ல அபாய்ண்ட்மென்ட் கேட்டாரம். ஆனால் சிவகார்த்திகேயனோ அவர் கதையே சொல்ல வேண்டாம், அவர் படத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.
சிம்புவதேவன் பெயரைக் கேட்டதும் சிவகார்த்திகேயனுக்கு ஏன் இப்படி தூக்கி வாரிப் போடுகிறது என்று பாண்டிராஜ் வியப்பில் உள்ளாராம்.