twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்புதேவன் பெயரைக் கேட்டதும் தெறித்து ஓடிய சிவகார்த்திகேயன்

    By Siva
    |

    Simbudevan's name scared Sivakarthikeyan
    சென்னை: சிம்புதேவன் பெயரைக் கேட்டதும் சிவ கார்த்திகேயன் ஏன் இப்படி அலறுகிறார் என்று இயக்குனர் பாண்டிராஜ் வியப்பில் உள்ளார்.

    வடிவேலுவை ஹீரோவாக வைத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை எடுத்து புகழ் பெற்றவர் இயக்குனர் சிம்புதேவன். அவர் இம்சை அரசன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். இதிலும் வடிவேலுவை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை அணுகினார். அப்போது வடிவேலு இடியாப்ப சிக்கலில் இருந்ததால் வேறு யாரையாவது நடிக்க வைக்குமாறு தெரிவித்துவிட்டார்.

    சிம்புதேவனும் பல ஹீரோக்களை அணுகியும் பலனில்லை. இந்நிலையில் வடிவேலு மீண்டும் நடிக்க வந்துள்ளார். உடனே அவரிடம் சென்று மீண்டும் கேட்டதற்கு அந்த கதை லேட்டஸ்ட் டிரெண்ட்டில் இல்லை நான் யுவராஜ் கதையில் நடிக்கப் போகிறேன் என்று வடிவேலு தெரிவித்துவிட்டாராம். இதையடுத்து சிம்புதேவன் தனது சிஷ்யன் இயக்குனர் பாண்டிராஜ் மூலம் சிவகார்த்திகேயனிடம் கதை சொல்ல அபாய்ண்ட்மென்ட் கேட்டாரம். ஆனால் சிவகார்த்திகேயனோ அவர் கதையே சொல்ல வேண்டாம், அவர் படத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

    சிம்புவதேவன் பெயரைக் கேட்டதும் சிவகார்த்திகேயனுக்கு ஏன் இப்படி தூக்கி வாரிப் போடுகிறது என்று பாண்டிராஜ் வியப்பில் உள்ளாராம்.

    English summary
    Sivakarthikeyan reportedly gets scared on hearing director Simbu Devan's name.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X