Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படத்தை ஹிட்டாக்க கொடூர பலாத்கார காட்சியை வைத்தேனா?: வெற்றி இயக்குனர் விளக்கம்
மும்பை: என் படத்தை ஓட வைக்க பலாத்கார காட்சி தேவையில்லை என்று பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடித்த சிம்பா படம் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் தொடர்ந்து 8 படங்கள் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளன.
படம் தியேட்டர்களில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
காட்சி
சிம்பா படத்தை ஓட வைக்க அதில் பலாத்கார காட்சியை வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு ஊழல் போலீஸ் அதிகாரி தனது இமேஜை சரி செய்ய பலாத்கார காட்சியை பயன்படுத்தியுள்ளார் ரோஹித் ஷெட்டி என்று படத்தை பார்த்தவர்கள் விளாசியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து ரோஹித் விளக்கம் அளித்துள்ளார்.
ரோஹித் ஷெட்டி
பலாத்கார காட்சியை பல படங்களில் காட்டியுள்ளனர். என் படத்தில் ஒன்றும் முதன்முதலாக காட்டவில்லை. இது ஒரு கமர்ஷியல் விஷயம், இதை மக்கள் வேறு மாதிரியாக யோசிக்கிறார்கள். படத்தை பார்த்தால் அந்த காட்சி திணிக்கப்பட்டது அல்ல என்பது புரியும். சென்சாரில் ஒரு இடத்தில் கூட சிம்பாவுக்கு கத்தரி போடவில்லை என்கிறார் ரோஹித்.
விளக்கம்
என் கெரியரில் தற்போது நான் இருக்கும் இடத்தில் பலாத்கார காட்சியை பயன்படுத்தி தான் என் படத்தை ஓட வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பலாத்காரம் செய்பவரை கொலை செய்வது பற்றி போலீசார் விவாதிக்கும் காட்சியை வைத்துள்ளேன். இது என் கருத்து, இயக்குனரின் கருத்து என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.
டெம்பர்
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான டெம்பர் படத்தின் இந்தி ரீமேக் தான் சிம்பா. ரோஹித் ஷெட்டி படங்களை விமர்சகர்கள் விளாசினாலும், ரசிகர்கள் கண்டமேனிக்கு கலாய்த்தாலும் படம் ரூ. 100 கோடியை தாண்டி வசூல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.