Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சிம்ரனுக்கு பிடித்த சூர்யா சென்னையில் நடந்த நட்சத்திரக் கலை விழாவில் கலந்து கொண்ட நடிகை சிம்ரன், ராக்கம்மா கையத் தட்டுப் பாடலுக்கு ஆடிரசிகர்களை குஷிப்படுத்தினார்.பான்யன் என்ற மன வளர்ச்சிக் குன்றியோருக்கான அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக இந்தியத் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றநேற்று இன்று நாளை என்ற கலை நிழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், பிரகாஷ் ராஜ், சிம்பு, அப்பாஸ், ரமேஷ்அரவிந்த், மாதவன், வினீத், ரமேஷ், சிம்ரன், ஷ்ரேயா, லட்சுமி ராய், ஸ்வர்ணமால்யா உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.மணி ரத்னத்தின் இயக்கம், சாபு சிரில் கலைவண்ணத்தில், இயக்குனர் வசந்த் உள்ளிட்டோரின் உழைப்பில் நடத்தப்பட்ட இந்தநிகழ்ச்சியின் தீம் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.கமல்ஹாசன், நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டிச் சீமையிலே என்ற பாடலைப் பாடினார். பிரகாஷ் ராஜ், யாரடி நீ மோகினி என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டார். சந்திரலேகா படத்தில் இடம் பெற்ற பிரமாண்டமானடிரம்ஸ் பாட்டுக்கு நடிகைகள் பானுப்பிரியா, ஸ்வர்ணமால்யா ஆகியோர் நடனமாடினர்.சகலகலாவல்லவனில் இடம்பெற்ற இளமை இதோ இதோ பாடலுக்கு ஷாம் ஆடினார், துள்ளுவதோ இளமை பாட்டுக்கு அப்பாஸ்ஆடினார்.இவர்களின் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த சிம்ரன், ராக்கம்மா கையைத் தட்டுப் பாட்டுக்கு ஆட்டடம் போட்டார்.அவருடன் சேர்ந்து சிம்புவும் ஆடினார். கல்யாணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கும் அம்மாவாகி விட்ட நிலையில், சிம்ரன்கலந்து கொண்ட முதல் டான்ஸ் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.சிம்ரன் ஆடியபோது கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக கையைத் தட்டி வரவேற்றனர்.ஒவ்வொரு பாடலுக்கேற்பவும் மேடையில் செட்டிங் மாற்றப்பட்டது பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சாபுசிரிலின் ஆர்ட் வண்ணம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வசூலான தொகை, பான்யன்அமைப்புக்கு உதவியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே மீண்டும் தமிழ் சினிமாவில் சிம்ரன் நடிக்கப் போகிறார்.. இதோ வருகிறார் என்று கூறப்பட்டுக் கொண்டே இருக்கும்நிலையில், ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க அட்வான்ஸை வாங்கியே விட்டார்.டென் மீடியா என்ற நிறுவனம் தயாரிக்க, சந்திர சித்தார்தா என்ற இயக்குனர் டைரக்ட் செய்யப் போகும் அந்தப் படத்தில் சிம்ரன்தான் ஹீரோயின். அதை முடித்துவிட்டு அப்படியே தமிழுக்கு வந்துவிடுவார் என்கிறார்கள்.இதற்கிடையே சிம்ரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், இப்போது தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றுசூர்யாவைச் சொல்லியிருக்கிறார். அவரது கணவர் தீபக்குக்கு மிகவும் பிடித்த நடிகை ஜோதிகாவாம். இது எப்படி இருக்கு?
சென்னையில் நடந்த நட்சத்திரக் கலை விழாவில் கலந்து கொண்ட நடிகை சிம்ரன், ராக்கம்மா கையத் தட்டுப் பாடலுக்கு ஆடிரசிகர்களை குஷிப்படுத்தினார்.
பான்யன் என்ற மன வளர்ச்சிக் குன்றியோருக்கான அமைப்புக்கு நிதி திரட்டுவதற்காக இந்தியத் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றநேற்று இன்று நாளை என்ற கலை நிழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், பிரகாஷ் ராஜ், சிம்பு, அப்பாஸ், ரமேஷ்அரவிந்த், மாதவன், வினீத், ரமேஷ், சிம்ரன், ஷ்ரேயா, லட்சுமி ராய், ஸ்வர்ணமால்யா உள்ளிட்ட திரையுலகினர் கலந்துகொண்டனர்.
மணி ரத்னத்தின் இயக்கம், சாபு சிரில் கலைவண்ணத்தில், இயக்குனர் வசந்த் உள்ளிட்டோரின் உழைப்பில் நடத்தப்பட்ட இந்தநிகழ்ச்சியின் தீம் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
கமல்ஹாசன், நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டிச் சீமையிலே என்ற பாடலைப் பாடினார்.
பிரகாஷ் ராஜ், யாரடி நீ மோகினி என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டார். சந்திரலேகா படத்தில் இடம் பெற்ற பிரமாண்டமானடிரம்ஸ் பாட்டுக்கு நடிகைகள் பானுப்பிரியா, ஸ்வர்ணமால்யா ஆகியோர் நடனமாடினர்.
சகலகலாவல்லவனில் இடம்பெற்ற இளமை இதோ இதோ பாடலுக்கு ஷாம் ஆடினார், துள்ளுவதோ இளமை பாட்டுக்கு அப்பாஸ்ஆடினார்.
இவர்களின் நிகழ்ச்சியை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த சிம்ரன், ராக்கம்மா கையைத் தட்டுப் பாட்டுக்கு ஆட்டடம் போட்டார்.அவருடன் சேர்ந்து சிம்புவும் ஆடினார். கல்யாணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்கும் அம்மாவாகி விட்ட நிலையில், சிம்ரன்கலந்து கொண்ட முதல் டான்ஸ் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்ரன் ஆடியபோது கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக கையைத் தட்டி வரவேற்றனர்.
ஒவ்வொரு பாடலுக்கேற்பவும் மேடையில் செட்டிங் மாற்றப்பட்டது பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
சாபுசிரிலின் ஆர்ட் வண்ணம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வசூலான தொகை, பான்யன்அமைப்புக்கு உதவியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மீண்டும் தமிழ் சினிமாவில் சிம்ரன் நடிக்கப் போகிறார்.. இதோ வருகிறார் என்று கூறப்பட்டுக் கொண்டே இருக்கும்நிலையில், ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்க அட்வான்ஸை வாங்கியே விட்டார்.
டென் மீடியா என்ற நிறுவனம் தயாரிக்க, சந்திர சித்தார்தா என்ற இயக்குனர் டைரக்ட் செய்யப் போகும் அந்தப் படத்தில் சிம்ரன்தான் ஹீரோயின். அதை முடித்துவிட்டு அப்படியே தமிழுக்கு வந்துவிடுவார் என்கிறார்கள்.
இதற்கிடையே சிம்ரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், இப்போது தமிழ் சினிமாவில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றுசூர்யாவைச் சொல்லியிருக்கிறார். அவரது கணவர் தீபக்குக்கு மிகவும் பிடித்த நடிகை ஜோதிகாவாம். இது எப்படி இருக்கு?