Don't Miss!
- News பான் கார்டு இருக்குல்ல? பான் நம்பர் செயலிழந்துட்டால் இந்த 10 விஷயம் பண்ண முடியாது.. பான் அட்டை மேஜர்
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஓரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Technology அடிச்சான் பாரு realme.. இவ்வளவு கம்மி விலையில Realme Narzo 70 Pro 5G போனா? கண்டிப்பா வாங்காம இருக்கமாட்டீங்க..
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ரஜினி படத்தில் சிம்ரன்: அடேங்கப்பா, இப்படி ஒரு கதாபாத்திரமா!!
Recommended Video
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தில் சிம்ரனும் உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
சிம்ரன்
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. தன் மகள்களை விட சிறு வயது நடிகைகளுடன் டூயட் பாடியது தவறு என்று காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தெரிவித்தார். இந்நிலையில் சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
நீலாம்பரி
சிம்ரன் நடிக்கிறார் ஆனால் ரஜினி ஜோடியாக இல்ல என்றும் கூறப்படுகிறது. படையப்பா படத்தில் வந்த நீலாம்பரி போன்று வலுவான கதாபாத்திரம் சிம்ரனுடையது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
சந்திரமுகி
சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் கர்ப்பமாகிவிட்டதால் அவருக்கு பதில் ஜோதிகாவை நடிக்க வைத்தனர். இந்நிலையில் அவர் ரஜினி படத்தில் நடிக்க உள்ளார்.
செகண்ட் இன்னிங்ஸ்
குழந்தைகள், குடும்பம் என்று செட்டிலான சிம்ரன் செகண்ட் இன்னிங்ஸில் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ரஜினியின் படம் நிச்சயம் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.