Don't Miss!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Technology தூக்குங்கடா செல்லத்தை.. Apple போட்ட டைட்டானியம் ரோஸ்மில்க்.. கண்ணை பறிக்கும் சுவாரசியமான iPhone 16 லீக்ஸ்..
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கிறாரா..? பிரபல நடிகை சிம்ரன் விளக்கம்!
சென்னை: சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக, வந்த தகவலை பிரபல நடிகை மறுத்துள்ளார்.
Recommended Video
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற படம் சந்திரமுகி. இதில் நயன்தாரா, பிரபு, வடிவேலு, வினீத், நாசர் உட்பட பலர் நடித்திருந்தனர்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார்.
அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்!
வடிவேலு காமெடி
2005-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட்டானது. வசூலிலும் சாதனை படைத்தது. வடிவேலுவின் காமெடியும், ரஜினியின் வேட்டையன் கேரக்டரும், ஜோதிகாவின் நடிப்பும் பாடல்களும் இந்தப் படத்தின் ஹைலைட்டான விஷயங்களாக இருந்தன. இந்தப் படத்தில் வடிவேலு காமெடி இப்போதும் பேசப்படுவதாக இருக்கிறது.
890 நாட்கள்
சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் இந்தப் படம் 890 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். படத்தை பி.வாசு இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்துக்காக, தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்திலிருந்து 3 கோடி ரூபாயை, கொரோனா நிவாரணத்துக்கு வழங்கி இருந்தார் லாரன்ஸ்.
நடிகை ஜோதிகா
இந்நிலையில் இந்தப் படத்தில் மீண்டும் நடிப்பீர்களா என்று நடிகை ஜோதிகாவிடம் கேட்டபோது, தன்னிடம் யாரும் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார். அதோடு, சந்திரமுகி கேரக்டரில் உங்களுக்கு பதில் வேறு எந்த நடிகை நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கேட்டதற்கு, நடிகை சிம்ரனைக் கூறியிருந்தார் ஜோதிகா.
அணுகவில்லை
இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்ரன் நடிப்பதாக செய்திகள் வெளியானது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் போய் கொண்டிருந்த இந்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார், நடிகை சிம்ரன். 'அது பொய்யான செய்தி. அந்த படத்துக்காக யாரும் என்னை அணுகவில்லை. செய்தியை வெளியிடும் முன், அது சரியானதுதானா என்று சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.