Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
ராகவா லாரன்ஸின் 'சந்திரமுகி 2' படத்தில் நடிக்கிறாரா..? பிரபல நடிகை சிம்ரன் விளக்கம்!
சென்னை: சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக, வந்த தகவலை பிரபல நடிகை மறுத்துள்ளார்.
Recommended Video
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கி மாபெரும் வெற்றிபெற்ற படம் சந்திரமுகி. இதில் நயன்தாரா, பிரபு, வடிவேலு, வினீத், நாசர் உட்பட பலர் நடித்திருந்தனர்.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்திருந்தார்.
அங்க ஜாக்கெட் போடணும்.. கலர் பூசி கவர் பண்ணக் கூடாது.. வைரலாகும் நிர்வாண அழகியின் ஹாட் போட்டோஸ்!
வடிவேலு காமெடி
2005-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட்டானது. வசூலிலும் சாதனை படைத்தது. வடிவேலுவின் காமெடியும், ரஜினியின் வேட்டையன் கேரக்டரும், ஜோதிகாவின் நடிப்பும் பாடல்களும் இந்தப் படத்தின் ஹைலைட்டான விஷயங்களாக இருந்தன. இந்தப் படத்தில் வடிவேலு காமெடி இப்போதும் பேசப்படுவதாக இருக்கிறது.
890 நாட்கள்
சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் இந்தப் படம் 890 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். படத்தை பி.வாசு இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்துக்காக, தான் வாங்கிய அட்வான்ஸ் பணத்திலிருந்து 3 கோடி ரூபாயை, கொரோனா நிவாரணத்துக்கு வழங்கி இருந்தார் லாரன்ஸ்.
நடிகை ஜோதிகா
இந்நிலையில் இந்தப் படத்தில் மீண்டும் நடிப்பீர்களா என்று நடிகை ஜோதிகாவிடம் கேட்டபோது, தன்னிடம் யாரும் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார். அதோடு, சந்திரமுகி கேரக்டரில் உங்களுக்கு பதில் வேறு எந்த நடிகை நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கேட்டதற்கு, நடிகை சிம்ரனைக் கூறியிருந்தார் ஜோதிகா.
அணுகவில்லை
இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்ரன் நடிப்பதாக செய்திகள் வெளியானது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகப் போய் கொண்டிருந்த இந்த செய்திக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார், நடிகை சிம்ரன். 'அது பொய்யான செய்தி. அந்த படத்துக்காக யாரும் என்னை அணுகவில்லை. செய்தியை வெளியிடும் முன், அது சரியானதுதானா என்று சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்