Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்
சென்னை : 1990 களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடியாக வலம் வந்தவர் சிம்ரன். 1997 ல் பிரபுதேவா நடித்த விஐபி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அடுத்தடுத்து இவர் நடித்த ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பூச்சூடவா, கொண்டாட்டம், அவர் வருவாளா என அனைத்து படங்களும் ஹிட் ஆகியன. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்தவர் சிம்ரன்.
2003 ல் தனது சிறு வயது நண்பரான தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்ட சிம்ரன், சிறிது காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பிறகு 2008 ல் சேவல் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.
சமீபத்தில் இவர் நடித்த ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது அந்தகன், சியான் 60, சர்தார், துருவ நட்சத்திரம், வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 45 வயதாகும் சிம்ரன், இன்று கொரோனாவிற்கான முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
Recommended Video
இதனை சமூக வலைதள பக்கங்களில் ஃபோட்டோவுடன் தெரிவித்துள்ள சிம்ரன் அத்துடன், தங்கள் குழந்தைகளை தொற்று நோய்களில் இருந்து ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முடிந்த அத்தனையையும் பெற்றொர்கள் செய்கிறார்கள். இதற்கான சிறந்த வழி தடுப்பூசி போட்டுக் கொள்வது. நான் எனக்கான முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். உங்களைச் சுற்றியுள்ள உங்களின் அன்பானவர்களின் நன்மைக்காக நீங்களும் இதனை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.