Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தயாரிப்பாளரானார் தீபக் பாகா.. மனைவி சிம்ரனை வைத்து படமெடுக்கிறார்!
முன்னாள் கனவுக் கன்னி, இந்நாள் குணச்சித்திர நடிகை சிம்ரனின் கணவர் தீபக் பாகா திரைப்படத் தயாரிப்பாளராக மாறினார்.
மனைவி சிம்ரனை வைத்து அவர் புதிய படம் தயாரிக்கிறார். இதனை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
திருமணத்துக்குப் பிறகு ஒதுங்கியிருந்த சிம்ரன், இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சிம்ரனின் கணவர் தீபக் பாகா, சின்னத்திரையில் பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியுள்ளார். இவர் தற்போது வெள்ளித் திரையிலும் தனது காலடியை பதித்துள்ளார்.
‘சிம்ரன் & சன்ஸ்' என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில், இவருடைய முதல் தயாரிப்பில் உருவாகும் படத்தை கௌரிசங்கர் என்பவர் இயக்கவுள்ளார்.
கௌரிசங்கர், பல முன்னணி நிறுவனங்களுக்கு பிரபல நட்சத்திரங்களை வைத்து நிறைய விளம்பரப் படங்களை இயக்கியவர். இவர் இயக்கும் அந்த புதிய படத்தில் சிம்ரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும், இந்த படத்தின் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்கள்.