Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்த நடிகை: வைரலான கடைசி வாய்ஸ் மெசேஜ்
புவனேஸ்வர்: சாகும் முன்பு நடிகை சிம்ரன் சிங் வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் வெளியாகியுள்ளது.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த நடிகை சிம்ரன் சிங் சம்பல்பூர் மாவட்டத்தில் மகாநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் கணவர் தான் கொலை செய்ததாக சிம்ரனின் தாய் தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிம்ரனின் கணவர் த்ருப்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இறப்பதற்கு முன்பு சிம்ரன் தனது தோழிக்கு வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த மெசேஜை சிம்ரன் எப்பொழுது அனுப்பினார் என்று தெரியவில்லை. இருப்பினும் அவர் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அனுப்பியதாக சந்தேகிக்கப்படுகிறது.
நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன், அனைவரையும் விட்டுச் செல்ல விரும்புகிறேன் என்று அந்த வாய்ஸ் மெசேஜில் சிம்ரன் தெரிவித்துள்ளார்.
சிம்ரனை அவரின் கணவரும், அவரின் பெற்றோரும் கொடுமைப்படுத்தியதாக அவரின் தாய் புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.