சிங்கம் 2 - சென்னை, செங்கல்பட்டு, கோவையில் வெளியாவதில் சிக்கல்!

By Shankar

சென்னை: வரும் 5-ம் தேதி வெளியாகும் சூர்யாவின் சிங்கம் 2 படம் சென்னை, செங்கல்பட்டு, கோவையில் மட்டும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சூர்யா - அனுஷ்கா - ஹன்சிகா - விவேக் - சந்தானம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சிங்கம் 2 படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யாவின் முந்தைய படமான மாற்றான் சரியாகப் போகாத நிலையில், அவரும் இந்தப் படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.

பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள சிங்கம் 2 வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டர்களுக்கும் மேல் இந்தப் படம் வெளியாகிறது. உலகம் முழுவதும் 2400 அரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மல்டிப்ளெக்ஸ்கள் அதிகம் உள்ள சென்னை - செங்கல்பட்டு - கோவை ஆகிய நகரங்களில் மட்டும் சிங்கம் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மல்டிப்ளெக்ஸ்களுடன் வருவாய் பகிர்வு முறையில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாகவே இந்த சிக்கல் நீடிக்கிறது. இதனால் இன்னும் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது.

இன்று மாலை அல்லது நாளைக்குள் பிரச்சினை தீரும் என சிங்கம் 2 தரப்பில் தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X