twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிங்கம் 2 - சென்னை, செங்கல்பட்டு, கோவையில் வெளியாவதில் சிக்கல்!

    By Shankar
    |

    சென்னை: வரும் 5-ம் தேதி வெளியாகும் சூர்யாவின் சிங்கம் 2 படம் சென்னை, செங்கல்பட்டு, கோவையில் மட்டும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சூர்யா - அனுஷ்கா - ஹன்சிகா - விவேக் - சந்தானம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சிங்கம் 2 படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    சூர்யாவின் முந்தைய படமான மாற்றான் சரியாகப் போகாத நிலையில், அவரும் இந்தப் படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.

    பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள சிங்கம் 2 வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.

    தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டர்களுக்கும் மேல் இந்தப் படம் வெளியாகிறது. உலகம் முழுவதும் 2400 அரங்குகளில் வெளியாகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் மல்டிப்ளெக்ஸ்கள் அதிகம் உள்ள சென்னை - செங்கல்பட்டு - கோவை ஆகிய நகரங்களில் மட்டும் சிங்கம் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மல்டிப்ளெக்ஸ்களுடன் வருவாய் பகிர்வு முறையில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாகவே இந்த சிக்கல் நீடிக்கிறது. இதனால் இன்னும் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது.

    இன்று மாலை அல்லது நாளைக்குள் பிரச்சினை தீரும் என சிங்கம் 2 தரப்பில் தெரிவித்தனர்.

    English summary
    Surya's Singam2, scheduled on July 5, but stand off with major multiplexes Chennai, Chengalpet & Coimbatore over terms & conditions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X