Don't Miss!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- News புதிய வீடு வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. கட்டுமான நிறுவனங்களுக்கு செக்.. மத்திய அரசு அதிரடி
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சிங்கம் 2 - சென்னை, செங்கல்பட்டு, கோவையில் வெளியாவதில் சிக்கல்!
சென்னை: வரும் 5-ம் தேதி வெளியாகும் சூர்யாவின் சிங்கம் 2 படம் சென்னை, செங்கல்பட்டு, கோவையில் மட்டும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சூர்யா - அனுஷ்கா - ஹன்சிகா - விவேக் - சந்தானம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சிங்கம் 2 படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சூர்யாவின் முந்தைய படமான மாற்றான் சரியாகப் போகாத நிலையில், அவரும் இந்தப் படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.
பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள சிங்கம் 2 வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.
தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டர்களுக்கும் மேல் இந்தப் படம் வெளியாகிறது. உலகம் முழுவதும் 2400 அரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் மல்டிப்ளெக்ஸ்கள் அதிகம் உள்ள சென்னை - செங்கல்பட்டு - கோவை ஆகிய நகரங்களில் மட்டும் சிங்கம் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மல்டிப்ளெக்ஸ்களுடன் வருவாய் பகிர்வு முறையில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாகவே இந்த சிக்கல் நீடிக்கிறது. இதனால் இன்னும் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது.
இன்று மாலை அல்லது நாளைக்குள் பிரச்சினை தீரும் என சிங்கம் 2 தரப்பில் தெரிவித்தனர்.