Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தென்னிந்தியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடியும் சூர்யாவின் சிங்கம் 2!
சூர்யா நடிக்க, ஹரி இயக்கும் சிங்கம் 2 படம் பரபரப்பாக வளர்ந்து வருகிறது.
இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட இந்தப் படம் குறித்து, இயக்குநர் ஹரி கூறுகையில், "சிங்கம் 2 வேகமாக இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஒரு படத்தின் இரண்டாம் பாகம், அதன் முதல் பாக கதையை ஒட்டியே உருவாவது இதுதான் முதல் முறை.
முதல் பாகத்தில் பிரகாஷ்ராஜ் இறந்துவிடுவார். அதனால் இந்த இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை. இதில் சந்தானம் இணைந்திருக்கிறார்.
உண்மையில் முதல் பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்துக்கான அவுட்லைன் என்னிடம் இருந்தது. படத்தின் க்ளைமாக்ஸில் வேட்டை தொடரும் என போட்டதால் பலரும் இரண்டமா பாகம் எப்போது என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதன் விளைவு இரண்டாம் பாகத்தை எடுத்தேன்.
முதல் பாகத்திற்கு சற்றும் குறையாமல் அதே விறுவிறுப்போடு இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளேன். இதன் கதை இந்தியாவில் ஆரம்பித்து தென்னாப்பிரிக்காவில் முடிகிறது. தூத்துக்குடிதான் கதைக்களம் என்றாலும், க்ளைமாக்ஸ் வெளிநாட்டில்தான்," என்றார்.