விஜயகாந்தை விமர்சிக்க வடிவேலுக்கு தகுதியில்லை! - சிங்கமுத்து ஆவேசம்

By Shankar

Singamuthu
சென்னை: திமுகவுக்கு ஆதரவாக அனல் பறக்கப் பேசி வரும் வடிவேலுவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளார் காமெடி நடிகர் சிங்கமுத்து.

சினிமாவில் காமெடியில் இணைந்து கலக்கியவர்கள் நடிகர் வடிவேலுவும் சிங்கமுத்துவும். நிலம் வாங்கி விற்றதில் இருவரும் எதிரிகள் ஆனார்கள். வடிவேலுவை கோடிக்கணக்கில் சிங்கமுத்து மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிங்கமுத்து கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் இருந்தார். இப்போது ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் குதித்தார். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசிவரும் வடிவேலு, விஜயகாந்தை ஒவ்வொரு கூட்டத்திலும் வெளுத்து வாங்குகிறார்.

வடிவேலுக்கு எதிராக யார் யாரையோ களமிறக்கிப் பார்க்கிறது அதிமுக. நடிகை விந்தியா, நடிகர் ராதாரவி ஆகியோர் வடிவேலுவை மட்டும் குறி வைத்துத் தாக்கி வருகின்றனர். ஆனாலும் வடிவேலுவின் பேச்சுக்கு முன் எதுவும் எடுபடவில்லை என்பதே உண்மை.

எனவே, வடிவேலுவின் எதிரியான சிங்கமுத்துவை களம் இறக்கியுள்ளது அதிமுக. இது தொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தார் சிங்கமுத்து. உடனே அவரை பிரசார களத்தில் இறங்குமாறு அ.தி.மு.க. உத்தரவிட்டுள்ளது. 1989-லிருந்து சிங்கமுத்து அதிமுகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னையில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் சிங்கமுத்து. ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.வளர்மதியை ஆதரித்து கிரீம்ஸ் ரோட்டில் பிரசாரம் செய்தார்.

வடிவேலுக்கு பதிலடி கொடுக்க சிங்கமுத்து களம் இறங்கியதால் தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. இந்தப் பிரச்சாரத்தில் நடிகர் சிங்கமுத்து பேசுகையில், "திமுக ஆட்சியில் இதற்கு மேலும் துன்பப்பட முடியாது. எனவேதான் மாற்றத்தை ஏற்படுத்த தமிழக மக்கள் விரும்புகிறார்கள். விலைவாசி உயர்வு, மின் வெட்டால் மக்கள் அவதிப்படுகிறார்கள். புரட்சித் தலைவியால்தான் தமிழக மக்களைக் காப்பாற்ற முடியும்.

வுடிவேலு பற்றிப் பேசுவதே அசிங்கம்....

தி.மு.க.வினருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. 2ஜி ஊழலிலிருந்து தப்பிப்பதுதான் அவர்கள் கவலை. புதிதாக ஒரு நடிகர் (வடிவேலு) வந்துள்ளார். அவரைப் பற்றி பேசுவதே அசிங்கம். விஜயகாந்த் சினிமாவில் சம்பாதித்து விட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரைப்பற்றி இவர் விமர்சிக்கிறார்.

நிதானமில்லாமல் விஜயகாந்த் பேசுகிறாராம். நீ எப்பப்ப நிதானமாய் இருப்பாய் என்று எனக்குத்தானே தெரியும். கட்டிய வேட்டியோடு சென்னைக்கு வந்தாய். ஒரு சோப்பை நாலாக வெட்டி வேட்டியை துவைத்து கட்டினாய். விஜயகாந்தை பற்றி விமர்சிக்க உனக்கு எந்த தகுதியும் இல்லை. பா வளர்மதி எம்ஜிஆர் ஆசிபெற்றவர். அமைச்சராக இருந்தவர். ஒரு நல்ல வேட்பாளரை புரட்சித்தலைவி தந்துள்ளார். பா.வளர்மதியை வெற்றி பெற செய்யுங்கள்...", என்றார்.இவ்வாறு அவர் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X