Don't Miss!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சிங்கமுத்து ஓட்டம்; வடிவேலு பொம்மை எரிப்பு! - பிரச்சார கலாட்டா!
அதேபோல, தேமுதிக தலைவர் விஜயகாந்தை விமர்சித்ததற்காக நடிகர் வடிவேலுவின் உருவ பொம்மையை தேமுதிகவினர் சிலர் திருச்செங்கோட்டில் எரித்தனர்.
சிங்கமுத்து...
ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட உத்தமர்சிலி, பனையபுரம் இடங்களில் நேற்று இரவு 9 மணிக்கு பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார்.
பிரச்சாரத்தின் போது அவர் நடிகர் வடிவேலுவையும், குஷ்புவையும் மோசமாக விமர்சித்து பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் முதல்வர் கருணாநிதியைப் பற்றி பேச முற்பட்டார்.
அப்போது திமுகவைச்சேர்ந்த கலைச்செல்வன், "டேய் கலைஞரை பற்றி பேசுனா கொன்னுடுவேன்"" என்று சொல்லிவிட்டு கொடிக் கம்பத்தை பிடுங்கிக் கொண்டு சிங்கமுத்துவை அடிக்க வந்தார். அவருடன் மேலும் சில திமுகவினரும் வந்தனர்.
உடனே அதிமுகவினர் புடை சூழ அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் சிங்கமுத்து. அதன் பின்னர் அதிமுகவினர் கலைச்செல்வனை தாக்கினர். கலைச்செல்வனும் பதிலுக்கு தாக்கினார்.
இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. கலைச்செல்வன் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவினர் ஸ்ரீரங்கம் தொகுதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடிவேலு பொம்மை...
இதே நேரம், தேமுதிக தலைவர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகர் வடிவேலுக்கு எதிராக திருச்செங்கோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்செங்கோடு - மௌசி பகுதியில் தேமுதிக தொண்டர்கள் ஆவேசத்துடன் வடிவேலுவின் உருவ பொம்மையை எரித்தனர். போலீசார் வருவதற்குள் தேமுதிகவினர் ஓடிவிட்டனர்.