twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'முதலில் இதைப் பண்ணுங்க...' - ரஜினி, கமலை போட்டுத்தாக்கிய நடிகர் சிங்கமுத்து!

    By Vignesh Selvaraj
    |

    ஈரோடு : அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் ஈரோடு சூரம்பட்டி பகுதியில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளரும், நடிகருமான சிங்கமுத்து கலந்து கொண்டு பேசினார்.

    ரஜினியும், கமலும் அரசியலுக்கு வரவிருப்பதாகச் சொல்லப்படுவதைப் பற்றிக் காரசாரமாகப் பேசினார் சிங்கமுத்து.

     ரெண்டுமே புரியாது :

    ரெண்டுமே புரியாது :

    'நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க-வை தொடர்ந்து குறை கூறிவருகிறார். இவர் பேசுவதில் அண்ணன் விஜயகாந்தை போன்றவர். காரணம் இரண்டு பேர் பேசுவதும் யாருக்குமே புரியாது.

    குறை சொல்வதை நிறுத்தணும் :

    குறை சொல்வதை நிறுத்தணும் :

    கமல் தாராளமாக அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்கள் பணியாற்றும் இந்த அரசைக் குறை கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றுங்கள். அப்புறம் அரசியல் பணியாற்றலாம்.

    பிக்பாஸ் நாட்டுக்குத் தேவையா? :

    பிக்பாஸ் நாட்டுக்குத் தேவையா? :

    ஜனநாயக நாட்டில் மக்கள் ஓட்டுப் போட்டால் யார் வேண்டுமானாலும் முதல் அமைச்சர் ஆகலாம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வை தவிர மக்கள் வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நாட்டுக்கு தேவையா?

    எந்த பலனும் இல்லை :

    எந்த பலனும் இல்லை :

    ரஜினிகாந்த் இளம் வயதில் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் போது நடிக்கப் போய்விட்டார். இப்போது வயதாகி முதுமை கண்டு விட்டார். இனி அவர் அரசியலுக்கு வந்தாலும் எந்த பலனும் இல்லை.

    மக்களுக்கு செலவு செய்தீர்களா? :

    மக்களுக்கு செலவு செய்தீர்களா? :

    இப்போது முடிந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் என்று ரஜினி கூறுகிறார். நீங்கள் சம்பாதித்த பணத்தில் இதுவரை எவ்வளவு பணத்தை மக்களுக்காகச் செலவு செய்தீர்கள்?

    சொத்துகளை எழுதி வையுங்கள் :

    சொத்துகளை எழுதி வையுங்கள் :

    நீங்கள் நடியுங்கள், சம்பாதியுங்கள். ஆனால் ஆட்சி செய்ய ஆசைப்படாதீர்கள். இல்லை என்றால் சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு அரசியலுக்கு வாருங்கள்.

    மக்கள் ஏற்க மாட்டார்கள் :

    மக்கள் ஏற்க மாட்டார்கள் :

    நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள். இனி தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள்வான்.' என நடிகர் சிங்கமுத்து பேசியிருக்கிறார்.

    English summary
    At the birthday anniversary of Annadurai, the AIADMK speaker singamuthu speaks. 'Rajini and kamal should write down all the property to the poor and come to politics', says singamuthu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X