Don't Miss!
- News பம்பரம் இல்லை! துரை வைகோ போட்டியிடுவது தீப்பெட்டியா? கேஸ் சிலிண்டர் சின்னமா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
'மெரினா புரட்சி'... உலகத்துல எங்க வேணும்னாலும் ரிலீஸ் செய்யலாம்... ஆனால் தமிழ்நாட்டில்?
மெரினா புரட்சி திரைப்படத்திற்கு சிங்கப்பூர் அரசு தணிக்கை சான்று வழங்கியுள்ளது.
Recommended Video
சென்னை : மெரினா புரட்சி திரைப்படத்திற்கு சிங்கப்பூர் அரசு தணிக்கை சான்று வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.
2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'மெரினா புரட்சி' திரைப்படத்திற்கு 80 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை.
எதற்காக தணிக்கை தர மறுக்கப்படுகிறுது எனும் காரணத்தை தெரிவிக்காமல் இரண்டு முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான நாச்சியாள் பிலிம்ஸ் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க தணிக்கை துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிங்கப்பூர் அரசு மெரினா புரட்சி திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கியிருக்கிறது.சிங்கப்பூர் அரசின் தணிக்கை பிரிவான இன்ஃபோ கம்யூனிகேஷன்ஸ் மீடியா வளர்ச்சி ஆணையம் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு என்சி 16 என்ற பிரிவின் கீழ் " தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தின் உண்மைகளை சொல்லும் படம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கனடா நாட்டிலும் ஏற்கனவே தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இப்படத்திற்கு இன்னும் தணிக்கை வழங்கப்படவில்லை. இதனால் படக்குழுவினர் மிகுந்த மனவேதனையில் இருக்கிறார்கள்.