Don't Miss!
- News எதே.. சம்மர் ஸ்பெஷலா ‘நுங்கு சாம்பாரா’? எதுக்கும் மூஞ்சிய சிரிச்ச மாதிரியே வச்சிப்போம்!
- Technology இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
- Lifestyle உடம்பு சூடு பிடிச்சுகிச்சா? அப்ப இந்த பழ ஜூஸ்களை அடிக்கடி வாங்கி குடிங்க.
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
- Finance ரூ. 500 க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்குதா.. பெண்களுக்கு குஷிதான்..இதை பாருங்க!
- Automobiles மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
- Sports கேப்டன் ரோஹித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன ஹர்திக் பாண்டியா.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
லிங்கா 'சிங்கா'தான் இப்போ விமலுக்கு காட்ஃபாதர்!
Recommended Video
ரஜினியின் லிங்கா படத்துக்கு ஏழரையைக் கூட்டிய சிங்காரவேலனை நினைவிருக்கிறதா... படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்குக் கூட கிடைக்காத பட்டப் பெயர் இவருக்குக் கிடைத்தது.. லிங்கா சிங்காரவேலன் என்று.
கொஞ்ச நாள் அமைதியாக இருந்தவர், இப்போது அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பது, ஃபைனான்ஸ் பண்ணுவது என பிஸியாகி வருகிறார். குறிப்பாக நடிகர் விமல் படங்களுக்கு காட்ஃபாதர் ரேஞ்சுக்கு வந்துவிட்டார்.
கடந்த ஜனவரியில் விமல் நடித்த 'மன்னர் வகையறா' படம் வெளியானது. இன்னும் சில அரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது. விமலைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய விஷயம்.
இந்தப் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருப்பதன் பின்னணியில் முக்கிய நபராக இருப்பவர் சிங்காரவேலன்தான். ஒருவிதத்தில் 'மன்னர் வகையறா' படம் வெளியாகவே இவர்தான் காரணமாம். விமலின் 'ஜன்னலோரம்' பட இழப்பீடு விவகாரம் மன்னர் வகையறா பட வெளியீட்டை பாதிக்கும் அளவுக்குத் தலைதூக்க, தனது கையில் இருந்து 2 கோடி ரூபாய் கொடுத்து எந்தவித சிக்கலுமின்றி 'மன்னர் வகையறா' வெளிவர உதவினாராம் சிங்காரவேலன்.
அடுத்ததாக விமலின் நடிப்பில் தயாராகிவரும் 'கன்னிராசி' படத்தை வெளியிடும் உரிமையையும்
சிங்காரவேலனே வாங்கியுள்ளார். படம் மார்ச் மாதம் வெளியாகிறது.
அதுமட்டுமல்ல, இனி விமல் நடிக்கும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ்
கொடுத்து உதவிக்கரமும் நீட்ட முன்வந்துள்ளார் சிங்காரவேலன். மேலும் அப்படி தயாராகும்
விமலின் படங்களை வெளியிடும் உரிமையையும் தானே வாங்கிக்கொள்ளவும் முடிவு செய்துள்ளாராம்.