Don't Miss!
- News நடிகர் விஜய்க்கு புதிய சிக்கல்.. ஓட்டுப்போட வந்தது குத்தமா? போலீசுக்கு பறந்த பரபர புகார்.. அடபாவமே
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
சென்று வாருங்கள் சகோதரரே.. இளையராஜாவின் டிரம்மர் மரணம்.. பிரபல பாடகர் இரங்கல்!
சென்னை: இளையராஜாவின் இசைக் குழுவில் நீண்ட ஆண்டுகளாக டிரம்மராக இருந்த புருஷோத்தமன் மரணம் அடைந்த செய்தி இசைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் இசை ட்ரூப்பில் அன்னக்கிளி படம் முதல் தற்போது வரை டிரம்மராகவும் கண்டக்டராகவும் இருந்தவர் புருஷோத்தமன். புருஷோத்தமன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரவித்து விருகின்றனர்.
புருஷோத்தமனுடன் நீண்ட ஆண்டுகள் பணிபுரிந்து வந்த பாடகர் அருண்மொழி( நெப்போலியன் செல்வராஜ்) தனது பேஸ் புக் பக்கத்தில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
ஹேப்பி பர்த்டே சித் ஸ்ரீராம்.. கடலில் கண்டெடுத்த முத்து.. சின்ன சீர்காழியும் சில சீக்ரெட்களும்!
"அன்பு புருஷோத்தமன் அவர்களே, தாங்கள் மறைந்த அந்தத் துயரச் செய்தி தங்கள் தமையன் திரு.சந்திரசேகர் வழியாக அறிந்தேன்! நானுட்பட இசைக்கலைஞர்கள் அத்துனை பேரும் அதிர்ந்து போனோம்! தொலைபேசி வாயிலாக துக்கத்தை பறிமாரி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டோம்!
தாங்கள் மறைந்துபோனாலும் தங்களின் இதயத் துடிப்பைத் தாளங்களாக்கி எத்தனை எத்தனை விதங்களில், கிட்டத்தட்ட இசைஞானியின் எல்லாப் பாடல்களிலும் முத்திரை பதித்துவிட்டே இறையடி பயணித்திருக்கிறீர்கள்!
ஒரு முறை துபாயில் நடந்த இசைநிகழ்ச்சியில் இசைஞானி தங்களை அறிமுகம் செய்கையில் தாங்கள் அன்னக்கிளி தொடங்கி இன்றுவரை உடன் பயணித்துக்கொண்டிருப்பவர் என்பதைச்சொல்லி, தன்னுடன் தோளோடு தோள்கொடுத்து கடினமாய் உழைப்பவர் என்று சிலாகித்ததை நினைவு கொள்கிறேன். எனக்குத் தெரிந்து வேறு யாரையும் இது போல இசைஞானி சென்னதில்லை என்று நினைக்கிறேன்.
தாங்கள் மறைந்தாலும் உலகம் உள்ளவரை தங்கள் நாதம் எங்கோ ஓரிடத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை! சென்று வாருங்கள் சகோதரரே! தங்களின் ஆன்மா இளைப்பாற்றலுக்காக எங்களின் வேண்டுதல்கள்" என தெரிவித்துள்ளார்.