Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
8 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான சின்மயி.. வாடகைத்தாய் மூலம் இல்லை என விளக்கம்!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல பாடகியும், டப்பிங் கலைஞருமான பாடகி சின்மயி இரண்டு அழகிய குழந்தைகளுக்கு அம்மாவாகி உள்ளார்.
ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளது என்றும் அவர்களின் பெயர்களையும் ரிவீல் செய்து பிஞ்சு விரல்களை பிடித்திருக்கும் செம க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
8 ஆண்டுகளுக்கு பிறகு பாடகி சின்மயிக்கு குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இது வாடகைத்தாய் மூலம் பெற்ற குழந்தைகள் அல்ல என்றும் விளக்கி உள்ளார்.
யப்பா சாமி என்ன இது? புடவை கட்டினா ஈவ் டீஸிங்கா...ஜீ தமிழ் சீரியலுக்கு சின்மயி கேள்வி!
37 வயதில் அம்மாவான சின்மயி
1984ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி மும்பையில் பிறந்தவர் பாடகி சின்மயி. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சின்மயி பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. பின்னணி பாடகியாக மட்டுமின்றி நயன்தாரா, சமந்தா, தமன்னா என பல முன்னணி நடிகைகளுக்கும் இவர் தான் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு டப்பிங் கொடுத்து இருக்கிறார். பல ஆண்டுகளாக குழந்தை பெறாமல் இருந்த நிலையில், தற்போது தான் தாயாகி விட்டேன் என்கிற சந்தோஷ செய்தியை பகிர்ந்துள்ளார் சின்மயி.
ட்வின்ஸ்
அதுவும் ஒன்றுக்கு இரண்டு குழந்தைகளாக தற்போது பாடகி சின்மயிக்கு மிகப்பெரிய சந்தோஷம் கிடைத்துள்ளது. நடிகர் ராகுல் ரவிந்திரனை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பாடகி சின்மயி சுமார் 8 ஆண்டுகள் கழித்து ஒரு ஆண் மற்றும் பெண் என இரு குழந்தைகளுக்கு அம்மாவாகி உள்ளார்.
பிஞ்சு விரல்களும் பெயர்களும்
பெண் குழந்தைக்கு த்ரிப்த்தா என்றும் ஆண் குழந்தைக்கு ஷர்வாஸ் என்றும் பெயர் சூட்டியுள்ள சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், குழந்தைகளின் பிஞ்சு விரல்களை ஷேர் செய்து எனக்கும் ராகுலுக்கும் இனி இவர்கள் இருவரும் தான் உலகமே என உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார். பாடகி சின்மயிக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
வாடகைத்தாய் மூலம் இல்லை
சில நெட்டிசன்கள் எனக்கு டைரக்ட் மெசேஜ் செய்து இது வாடகைத்தாய் மூலம் பிறந்த குழந்தைகள் தானே என கேட்டிருந்தார்கள். மேலும், நீங்கள் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கவும் இல்லை, அப்போது எடுத்த புகைப்படங்களையும் பகிரவில்லையே என்றனர். எனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும் நான் கர்ப்பமாக இருந்த விஷயம். முன்னரே சொல்லி இருந்தால், அதற்கு ஏகப்பட்ட கதைகளை கட்டி மனசுக்கு கஷ்டத்தை கொடுத்திருப்பார்கள். அதனால் தான் வெளியே சொல்லவில்லை என விளக்கம் கொடுத்திருக்கிறார்.
பிரபலங்கள் வாழ்த்து
நடிகர் பிரசன்னா, நடிகை கல்யாணி பிரியதர்ஷினி இயக்குநர் லீனா மணிமேகலை என பல பிரபலங்கள் சின்மயிக்கு குழந்தை பிறந்த செய்தி தெரிந்ததும் ட்வீட் போட்டு வாழ்த்தி வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் சின்மயி. மேலும், சி செக்ஷனின் போது பஜன் பாடலை தான் பாடியதாகவும் பதிவிட்டு இருக்கிறார் சின்மயி. தாயும் குழந்தைகளும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்