Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பல நாட்களாக மருத்துவமனையில்... எப்படி இருக்கிறார் லதா மங்கேஷ்கர்
மும்பை : லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்துவரும் மும்பை மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கொரோனாவின் கோரப்பிடியில் பல திரைப்பிரபலங்கள் சிக்கி அவதிப்பட்டு வருகிறார்கள்.
பத்த வைக்க வந்துட்டாருப்பா மொட்டை தாத்தா.. அல்டிமேட் ரெசிபியுடன் பிக் பாஸை அலறவிடப் போறாரு!
லதா மங்கேஷ்கர்
திரைத்துறையில் முடிசூடா அரசியாக விளங்குபவர் லதா மங்கேஷ்கர். 1,000 க்கும் மேற்பட்ட ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் பல்வேறு பிராந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இந்தியா முழுவதும் அல்லாமல் உலகெங்கும் பல்வேறு மொழி பேசும் கோடிக்கணக்கான மக்கள் அவரது ரசிகர்களாக உள்ளனர்.
மருத்துவமனையில்
லதா மங்கேஷ்கருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையின்போது நிமோனியாவும் இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து ஐ.சி.யூவில் இருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
முன்னேற்றம்
இந்நிலையில், அவருக்கு சிகிச்சையளித்துவரும் மருத்துவக்குழுவின் தலைவர் பிரதித் சம்தானி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு இருந்தது, ஆனால் தற்போது வென்டிலேட்டரின் அகற்றப்பட்டு அவர் நலமுடன் இருக்கிறார். இருப்பினும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்களின் இந்த தகவலால் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
பல விருதுகள்
இந்தியாவின் மெலடி குயின் என்று அழைக்கப்படும் பாடகர் -- பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பல தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். வயது மூப்பு காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் மிகக்கவனமாக கவனித்து வருகின்றனர். அவர் பூரண உடல் நலன் பெற வேண்டும் என்பது கோடிக்கணக்கான அவரது ரசிகர்களின் ஆவலாக உள்ளது.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!