Just In
- 3 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 4 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 5 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எஸ்.பி.பிக்கு கொரோனா பரவ நான் காரணமா..? டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல பாடகி போலீஸில் புகார்!
சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு தான் காரணமல்ல என்று பிரபல நடிகை விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை கூறப்படுகிறது.

கூட்டுப் பிரார்த்தனை
அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அவர் உடல் நலம்பெற, நேற்று மாலை 6 மணிக்கு நடிகர், நடிகைள் பங்கேற்கும் கூட்டுப் பிரார்த்தனைக்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்கள், ரசிகர்கள் அவரவர் வீட்டில் இருந்த படி எஸ்.பி.பி பாடிய பாடல்களை ஒலிக்கவிட்டு பிரார்த்தனை செய்தனர். பாரதிராஜா தலைமையில், சரோஜாதேவி, பிரபு, அமீர், வெற்றிமாறன், தங்கர் பச்சான், பார்த்திபன், சேரன் உள்பட பலர் பிரார்த்தனை செய்தனர்.

பாடகி மாளவிகா
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பின்னணி பாடகி மாளவிகாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி சுனிதாவுக்கும் இந்தத் தொற்று உறுதியானது. இதனால், மாளவிகா கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியனும் கலந்துகொண்டிருந்தார் என்றும் மாளவிகா மூலமாகவே கொரோனா தொற்று எஸ்.பி.பிக்கு பரவியது என்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்தி பரவியது.

எஸ்.பி.பி நிகழ்ச்சி
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாடகி மாளவிகா, இதற்கு தனது பேஸ்புக்கில் மறுப்புத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பிரபல பாடகர்களுடன் எஸ்.பி.பி கலந்துகொண்ட டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பு, ஜூலை 30 மற்றும் 31 அன்று நடந்தது. இரண்டாவது நாளில் 4 பாடகிகளில் நானும் ஒருவராகக் கலந்து கொண்டேன். எனக்குத் தொற்று ஏற்பட்டிருந்தால் என் மூலம் மற்ற பாடகர்களுக்கும், மேக்கப் ரூமில் இருந்தவர்களுக்கும் பரவி இருக்க வேண்டும்.

கொரோனா சோதனை
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இன்னும் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நானும் 8 ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கும் என் பெற்றோருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டது. ஆனால் என் கணவர் மற்றும் டிரைவருக்கு இல்லை.

சைபர் கிரைம்
அதற்கு நான் தனிமை சிகிச்சை எடுத்துக்கொண்டேன். என் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதான் நடந்தது. தேவையில்லாமல் போலிச் செய்திகளை பரப்ப வேண்டாம். வாட்ஸ் அப்பிலும் சமூக வலைதளங்களிலும் பொய்யாக வதந்தி பரப்புகிறவர்கள் மீது, சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்துள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.