Don't Miss!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எஸ்பிபியின் உடலை பார்த்து குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுத பாடகர் மனோ!
சென்னை: பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் புகழ் உடலை பார்த்து பாடகர் மனோ கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.
Recommended Video
மாய குரலோன் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள எஸ்பிபியின் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரு இசை சகாப்தமே முடிந்துவிட்டது என உருக்கமாக கூறி வருகின்றனர்.
தேசிய விருது தந்த படம்.. 'சங்கராபரணம்' வாய்ப்பு பாடகர் எஸ்.பி.பி-க்கு கிடைத்தது இப்படித்தான்!
பிரபலங்கள் நேரில் அஞ்சலி
மறைந்த எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல் செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு காவல்துறை மரியாதையுடன நல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
கதறி அழுத மனோ
தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் உள்ள எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அவரது நண்பரும் பாடகருமான மனோ நேரில் அஞ்சலி செலுத்தினார். நெஞ்சில் அடித்துக்கொண்டப் படியே கண்ணீர் விட்டு கதறினார் மனோ. குழந்தையை போல் தேம்பி தேம்பி அழுத அவரை இசையமைப்பாளர் தீனா, அணைத்தப்படி ஆசுவாசப்படுத்தினார்.
பாரதிராஜா, தேவி ஸ்ரீபிரசாத்
மேலும் இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் ஆகியோரும் எஸ்பிபியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் எஸ்பிபியின் உடலுக்கு இயக்குநரும் நடிகருமான அமீரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர்கள் விஜய், அர்ஜூன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
ரசிகர்கள் அஞ்சலி
திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரியும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆந்திர அரசின் சார்பிலும் மறைந்த எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதோடு ரசிகர்களும் வரிசையில் காத்திருந்து எஸ்பிபியின் உடலுலக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.