Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
எக்கச்சக்க பணம், மதுபாட்டில்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பிரபல பாடகர் கைது
இந்தி பாடகர் மிகா சிங் பாங்காக்கில் நடந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு தனியார் விமானம் மூலம் நேற்று இரவு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அப்போது அவரை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 3 லட்சம் ரூபாயும் மற்றும் 12,000 அமெரிக்க டாலர்களும்(ரூ.6.36 லட்சம்) இருந்தன. மேலும் ஏகப்பட்ட மதுபான பாட்டில்களும் வைத்திருந்தார். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ரொக்கம் வைத்திருந்ததால் அவரை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஒரு பயணி 3,000 டாலர் ரொக்கம் மற்றும் 7,000 டாலருக்கான டிராவலர்ஸ் செக் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். மேலும் ரூ. 7,500 ரொக்கம் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் அவரிடம் மதுபாட்டில்கள் குறித்து தான் விசாரிக்கப்பட்டது. அப்போது அவரிடம் எவ்வளவு ரொக்கம் இருக்கிறது என்று கேட்டதற்கு ரூ.1 லட்சமும், 5,000 டாலரும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் மீது சந்தேகப்பட்டு சோதனை செய்ததில் தான் மொத்த பணமும் சிக்கியது.
கடந்த 2006ம் ஆண்டு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்தின் பிறந்தநாள் அன்று அவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியவர் மிகா சிங்.