twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரபல பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி மரணம்: மறக்க முடியுமா அந்த 'குழந்தை' குரலை?

    By Siva
    |

    சென்னை: பிரபல பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார்.

    1950களில் குழந்தை நட்சத்திரங்களுக்காக பாடல் பாடியவர் எம்.எஸ். ராஜேஸ்வரி. மகான் காந்தியே மகான், ஓ ரசிக்கும் சீமானே, மியாவ் மியாவ் பூனைக்குட்டி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பேபி ஷாமிலி நடிப்பில் வெளியான துர்கா படத்தில் வந்த பாப்பா பாடும் பாட்டு பாடலை பாடியவரும் ராஜேஸ்வரியே.

    Singer MS Rajeswari no more

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். சென்னையில் வசித்து வந்த ராஜேஸ்வரி உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிர் இழந்தார்.

    அவருக்கு வயது 87 ஆகும். ராஜேஸ்வரியின் மரண செய்தி அறிந்து திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். ஆர். சுதர்சனம் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

    ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சங்கர்-கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ் உள்ளிட்டோரின் இசையில் பாடல்கள் பாடியுள்ளார்.

    English summary
    Popular playback singer MS Rajeswari passed away on wednesday in Chennai. She was 87. Film industry celebrities have expressed their deepest condolences.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X