Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கசப்பில் முடிந்தது காதல்.. பாடகரை திருமணம் செய்த பிரபல நடிகை விவாகரத்து.. திரையுலகில் பரபரப்பு
ஐதராபாத்: பாடகரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை இப்போது விவாகரத்து செய்துள்ளார்.
Recommended Video
பிரபல நடிகை எஸ்தர் நோரன்ஹா. மங்களூரைச் சேர்ந்த இவர், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வருகிறார்.
தமிழில், பிரபு, ஜெயராம் நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அவர், மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார்.
இந்த நடிகையோட குடும்பம் இவ்ளோ பெருசா.. ஓணம் பண்டிகையால் வெளியான ஆச்சரியம்!
இந்தியில் அறிமுகம்
இந்தியில் சரோஜ்கான் இயக்கிய பரோமாஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான எஸ்தர், தொடர்ந்து குயாமத் ஹே குயாமத் படத்தில் நடித்தார். தேஜா இயக்கிய 1000 அப்பாடுலு என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பிறகு சுனிலின் பிமாவரம் புல்லுடு என்ற படத்தில் நடித்தார். கன்னடப் படத்திலும் நடித்துவரும் இவர், கடந்த சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.
பின்னணி பாடகர்
எஸ்தர் நோரன்ஹா சிறந்த பாடகியும் கூட. இவர் சில படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். கொங்கனி படங்களில் பாடியுள்ள அவர், ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் பின்னணி பாடகர் நோயல் சீன் என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார்.
காதல் திருமணம்
நோயல் சீன், பல தெலுங்கு படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். ராப் பாடகரான இவர் தமிழில் இஞ்சி இடுப்பழகி படத்திலும், காதல்னா சும்மா இல்லை படத்திலும் பாடி இருக்கிறார். இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது.
இசை ஆல்பங்கள்
சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்குப் பின் இருவரும் இணைந்து இசை ஆல்பங்களில் பங்கேற்று வந்தனர். இந்நிலையில், இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் இது பற்றி இருவரும் ஏதும் தெரிவிக்கவில்லை.
கனவு நனவாகட்டும்
இந்நிலையில், தாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார் நோயல். 'அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டோம். பொதுவெளியில் அறிவிக்க நீதிமன்ற முடிவுக்காக காத்திருந்தோம். எஸ்தருக்கு சிறந்த வாழ்க்கை அமையும் அவர் கனவு நனவாகவும் வாழ்த்துகிறேன். கடவுள் அருள் புரியட்டும் என்று கூறியுள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.