Don't Miss!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தமிழ்நாடு பவுண்டேஷன் நட்சத்திரப் போட்டியில் நடுவராக 'போட்டுத் தாக்கு..’ ரோஷிணி!
ஜீனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் இந்த நட்சத்திரப் பாட்டுப்போட்டி நடைபெறுகிறது. டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன், சான் அன்டோனியோ, டல்லாஸ் மற்றும் ஆஸ்டின் நகரில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் இந்த இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றுள்ளார்கள். அந்தந்த ஊர்களில் நடைபெற்ற அரையிறுதி போட்டிகளே விறுவிறுப்பாக, படுசுவாராஸ்யமாக இருந்ததால், இறுதிப் போட்டியைக் காண அதிக ஆர்வத்துடன் நண்பர்களும், உறவினர்களும் ஹூஸ்டன் நோக்கி பயணப்பட்டுள்ளனர்.
இளையராஜாவுடன் 'நம்ம காட்டுலே மழை பெய்யுது' என்று பாடினாலும், தீராத விளையாட்டுப் பிள்ளையில் 'என் ஜன்னல் வந்த காற்றே' என்று தென்றலாக தவழ்ந்தாலும் , யாராடி நீ மோகினி க்காக 'ஓ பேபி' யாக மாறினாலும், உச்சத்தை தொட்ட 'கருப்பான கையாலே என்னை புடிச்சான்' பாடலை விட ரோஷிணியின் அடையாளமாக மாறிப்போனது 'நீலாம்பரி' ரம்யா கிருஷ்ணனின் குத்தாட்ட பாடலான 'போட்டுத் தாக்கு' தான்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, தேவிஸ்ரீ பிரசாத், வித்யாசாகர் என பிரபல இசையமைப்பாளர்கள் அனைவரது இசையிலும் பாடியுள்ள ரோஷிணி, 37 மணி நேரம் தொடர்ந்து பாடல்களை பாடி கின்னஸிலும் இடம் பிடித்துள்ளார்.
37வது தமிழ் நாடு அறக்கட்டளை தேசிய மாநாட்டு நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்பதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர்களின் பரிசு விவரம், மே 25ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள ஹூஸ்டனில் நடைபெறும் தமிழ்நாடு அறக்கட்டளை தேசிய மாநாட்டு நிகழ்ச்சிகளில் அறிவிக்கப்படும்.
ஹூஸ்டன் மீனாட்சி கோவில் திருமண மண்டபத்தில், சனிக்கிழமை(இன்று) மாலை 2.30 மணி அளவில் நடைபெறும் இந்த டி.என்.எஃப் நட்சத்திரப்போட்டியை காண அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.என்.எஃப் ஐடல் போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜ் தியாகாரஜன் தலைமையில் கோபிநாத், ஜொனதன் ஜனார்தனம், கார்த்திகா மகாதேவ் மற்றும் பல தன்னார்வ தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு http://tnfconvention.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்