Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
தமிழ்நாடு பவுண்டேஷன் நட்சத்திரப் போட்டியில் நடுவராக 'போட்டுத் தாக்கு..’ ரோஷிணி!
ஜீனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் இந்த நட்சத்திரப் பாட்டுப்போட்டி நடைபெறுகிறது. டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன், சான் அன்டோனியோ, டல்லாஸ் மற்றும் ஆஸ்டின் நகரில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்கள் இந்த இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றுள்ளார்கள். அந்தந்த ஊர்களில் நடைபெற்ற அரையிறுதி போட்டிகளே விறுவிறுப்பாக, படுசுவாராஸ்யமாக இருந்ததால், இறுதிப் போட்டியைக் காண அதிக ஆர்வத்துடன் நண்பர்களும், உறவினர்களும் ஹூஸ்டன் நோக்கி பயணப்பட்டுள்ளனர்.
இளையராஜாவுடன் 'நம்ம காட்டுலே மழை பெய்யுது' என்று பாடினாலும், தீராத விளையாட்டுப் பிள்ளையில் 'என் ஜன்னல் வந்த காற்றே' என்று தென்றலாக தவழ்ந்தாலும் , யாராடி நீ மோகினி க்காக 'ஓ பேபி' யாக மாறினாலும், உச்சத்தை தொட்ட 'கருப்பான கையாலே என்னை புடிச்சான்' பாடலை விட ரோஷிணியின் அடையாளமாக மாறிப்போனது 'நீலாம்பரி' ரம்யா கிருஷ்ணனின் குத்தாட்ட பாடலான 'போட்டுத் தாக்கு' தான்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் யுவன் ஷங்கர் ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, தேவிஸ்ரீ பிரசாத், வித்யாசாகர் என பிரபல இசையமைப்பாளர்கள் அனைவரது இசையிலும் பாடியுள்ள ரோஷிணி, 37 மணி நேரம் தொடர்ந்து பாடல்களை பாடி கின்னஸிலும் இடம் பிடித்துள்ளார்.
37வது தமிழ் நாடு அறக்கட்டளை தேசிய மாநாட்டு நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்பதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர்களின் பரிசு விவரம், மே 25ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள ஹூஸ்டனில் நடைபெறும் தமிழ்நாடு அறக்கட்டளை தேசிய மாநாட்டு நிகழ்ச்சிகளில் அறிவிக்கப்படும்.
ஹூஸ்டன் மீனாட்சி கோவில் திருமண மண்டபத்தில், சனிக்கிழமை(இன்று) மாலை 2.30 மணி அளவில் நடைபெறும் இந்த டி.என்.எஃப் நட்சத்திரப்போட்டியை காண அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.என்.எஃப் ஐடல் போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜ் தியாகாரஜன் தலைமையில் கோபிநாத், ஜொனதன் ஜனார்தனம், கார்த்திகா மகாதேவ் மற்றும் பல தன்னார்வ தொண்டர்கள் செய்து வருகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு http://tnfconvention.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்