Don't Miss!
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கங்காரு படம் + பாட்டு சக்சஸ்... ஸ்ரீநிவாஸ் ஹேப்பி அண்ணாச்சி!
சென்னை: கங்காரு படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார் பிரபல பிண்ணனிப் பாடகர் ஸ்ரீநிவாஸ்.
படையப்பா படத்தில் இடம்பெற்ற ‘மின்சாரக்கண்ணா' உள்ளிட்ட பல்வேறு பாடல்களைப் பாடியவர் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ். இவர் முதன்முறையாக கங்காரு படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில், கங்காரு படத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள வரவேற்பால் ஸ்ரீநிவாஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தனது மகிழ்ச்சி குறித்து அவர் கூறியிருப்பதாவது :-
2000 பாடல்கள்...
நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 2000 பாடல்கள் பாடியிருக்கிறேன். எனக்கு இசைமீது தனியாத தாகம் உண்டு. ஆர்வமுண்டு. நம்பிக்கை உண்டு. ஆனால் இசையமைப்பதைத் தேடிப் பயணப் படவில்லை.
ஒரு பாடலுக்கு மட்டும்...
காரணம் பாடகராகவே நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. அப்படியும் வஸந்த் சார் இயக்கத்தில் 'ஏய்நீ ரொம்ப அழகா இருக்கே' படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்தேன்.
இனி நானும் நானில்லை...
'இனி நானும் நானில்லை' என்கிற அந்தப் பாடலும் ஹிட்தான். மீண்டும் இசை அமைக்க நேரமில்லை. இந்நிலையில் நண்பர் மூலம் சாமி வந்தார்.
நேர்மையான கதை...
கதை கேட்டேன். ரொம்பவும் நேர்மையாக இருந்தது. பாடல் உருவானது பாடல்பிடித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சம்மதித்தது அவரது ரசனையின் மதிப்பைக் காட்டியது.
என் பாக்கியம்...
வைரமுத்து சாரின் வரிகளைப் பாடியிருக்கிறேன். அவர் வரிகளுக்கு இசையமைப்பேனா என்று கனவு கூட கண்டதில்லை. அப்படி நடந்தது என்பாக்கியம் .அவர் பாடல்கள் படத்துக்குப் பெரிய பலம்.
இருவேறு அனுபவங்கள்...
படத்தில் 5பாடல்கள் . அவர் எழுதிய வரிகளுக்கு இசையமைத்து 2 பாடல்களும் மெட்டுக்கு எழுதி 3 பாடல்களும் என்று இசையமைப்பில் இருவேறு அனுபவங்களும் கிடைத்தன. பாடல்கள் பெரியவெற்றி. ஐடியூன்களில் நம்பர் ஒன் ஆனது.
மகிழ்ச்சி...
காதல், பாசம், தத்துவம் என எல்லாவகை பாடல்களும் உள்ளன. பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து படமும் வெற்றி பெற்றிருப்பதால் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்..''எனத் தெரிவித்துள்ளார்.