Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா.. இம்முறை சொந்தக் குடும்பத்தினர் மீதே புகார்!
தான் காணாமல் போகவில்லை என பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தன்னிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க தனது தங்கை முயற்சிப்பதாக பாடசி சுசித்ரா மீண்டும் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
சுசி லீக்ஸ்.. இந்த பேரக் கேட்டாலே தமிழ் திரையுலகமே சும்மா அதிருமுல்ல.. இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன சுசி லீக்ஸ் பரபரப்புகள் முடிவுக்கு வந்து.. ஆனாலும் அந்த பாதிப்பு இன்றும் பலரை பின்தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
2017ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகையரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பாடகி சுசித்ரா. பின்னர் தனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக கணவர் கார்த்திக்குமார் மூலம் அறிவித்தார் சுசி.
பாடகி சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என கணவர் கார்த்திக்குமார் கூறினார். பிறகு கணவரை பிரிந்து, சென்னை அடையாறில் உள்ள தனது தங்கை சுஜிதாவின் வீட்டில் தஞ்சமடைந்தார் சுசித்ரா. இரண்டு ஆண்டுகளாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார்.
மிலிட்ரியா.. மிரட்டும் விஷாலின் 'சக்ரா' ஃபர்ஸ்ட் லுக்!
சுசித்ராவை காணவில்லை
இந்நிலையில் கடந்த 11ம் தேதி சுசித்ராவை காணவில்லை என அடையாறு காவல் நிலையத்தில் சுஜிதா புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுசித்ரா தங்கியிருந்தது தெரியவந்தது.
சுசியின் விளக்கம்
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சுசித்ராவிடம் விசாரித்தனர். அப்போது, தான் காணாமல் போகவில்லை என்றும், தங்கையுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சுசித்ரா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து
மேலும் தன்னிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க தனது தங்கை முயற்சிப்பதாகவும், அதற்காகவே தன்னை அவர் தேடுவதாகவும் சுசித்ரா கூறியுள்ளார். குடும்பத்தினர் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடத்துவதால் தான், வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக சுசித்ரா தெரிவித்துள்ளார்.
சிகிச்சை எடுக்கிறேன்
இருப்பினும் காவல்துறையினர் அறிவுறுத்தியதால் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் சிசுத்ரா கூறியுள்ளார். இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?