Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய ‘சுசிலீக்ஸ்’ சுசித்ரா.. இம்முறை சொந்தக் குடும்பத்தினர் மீதே புகார்!
தான் காணாமல் போகவில்லை என பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தன்னிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க தனது தங்கை முயற்சிப்பதாக பாடசி சுசித்ரா மீண்டும் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.
சுசி லீக்ஸ்.. இந்த பேரக் கேட்டாலே தமிழ் திரையுலகமே சும்மா அதிருமுல்ல.. இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன சுசி லீக்ஸ் பரபரப்புகள் முடிவுக்கு வந்து.. ஆனாலும் அந்த பாதிப்பு இன்றும் பலரை பின்தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
2017ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல நடிகர், நடிகையரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பாடகி சுசித்ரா. பின்னர் தனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக கணவர் கார்த்திக்குமார் மூலம் அறிவித்தார் சுசி.
பாடகி சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என கணவர் கார்த்திக்குமார் கூறினார். பிறகு கணவரை பிரிந்து, சென்னை அடையாறில் உள்ள தனது தங்கை சுஜிதாவின் வீட்டில் தஞ்சமடைந்தார் சுசித்ரா. இரண்டு ஆண்டுகளாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார்.
மிலிட்ரியா.. மிரட்டும் விஷாலின் 'சக்ரா' ஃபர்ஸ்ட் லுக்!
சுசித்ராவை காணவில்லை
இந்நிலையில் கடந்த 11ம் தேதி சுசித்ராவை காணவில்லை என அடையாறு காவல் நிலையத்தில் சுஜிதா புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சுசித்ரா தங்கியிருந்தது தெரியவந்தது.
சுசியின் விளக்கம்
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சுசித்ராவிடம் விசாரித்தனர். அப்போது, தான் காணாமல் போகவில்லை என்றும், தங்கையுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சுசித்ரா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து
மேலும் தன்னிடம் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க தனது தங்கை முயற்சிப்பதாகவும், அதற்காகவே தன்னை அவர் தேடுவதாகவும் சுசித்ரா கூறியுள்ளார். குடும்பத்தினர் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடத்துவதால் தான், வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக சுசித்ரா தெரிவித்துள்ளார்.
சிகிச்சை எடுக்கிறேன்
இருப்பினும் காவல்துறையினர் அறிவுறுத்தியதால் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் சிசுத்ரா கூறியுள்ளார். இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.