கத்தை கத்தையா ஆதாரம்.. அதனாலதான் பெயர்களை சொல்லுகிறேன்.. என் மேல கேஸ் போட தைரியம் இருக்கா? சுசித்ரா சவால்!

சென்னை: கொக்கைன் போதைப் பொருள் பயன்பாடு தமிழ் சினிமா உலகில் மிகவும் சாதாரணமாக நடைபெற்று வருவதாக பின்னணி பாடகி சுசித்ரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொக்கைன் பயன்படுத்தியது மற்றும் விநியோகம் செய்தது என நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் கிருஷ்ணா, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மற்றும் கெவின் என நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில் சுசித்ரா " Naadhas" என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களின் பெயர்களைத் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில், " சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் த்ரிஷாவும், கீதாஞ்சலி செல்வராகவனும் என் மீது வழக்கு தொடுத்தார்கள். அவர்கள் என்னிடத்தில் கொக்கைன் இருப்பதாகவும் நான் விற்பனை செய்து வருவதாகவும் புகார் அளித்தார்கள். காவல்துறை எனது வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம் சோதனை செய்தது. அவர்கள் எனது ரத்த மாதிரிகளையும் பெற்றுச் சென்றனர். இறுதியில் என் மீது தவறு இல்லை என்பதால் காவல்துறை அமைதியாக இருந்து விட்டார்கள்.

Singer Suchitra Recent Interview About kollywood Drug Case She talks Evidence against Celebrities
Photo Credit:

ஆனால் இந்த விஷயத்தை நான் ஏற்கனவே பலமுறை கூறினேன். நான் பல திரைப் பிரபலங்களின் பெயர்களை மிகவும் தைரியமாக பல பேட்டிகளில் சொல்லி வருகிறேன். ஒருவர் போதைப்பொருள் விவகாரத்தில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு பேசுகிறார் என்றால் ஆதாரம் இல்லாமல் பேசுவார்களா? என்னிடத்தில், வாட்ஸ் ஆப் ஸ்கிரீன் ஷாட்ஸ் மட்டும் 23 உள்ளது. இது மட்டுமல்லாமல் கத்தை கத்தையாக ஆதாரங்கள் உள்ளது.

ஆதாரம் இருக்கு: என் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம். அப்படி அவர்கள் மான நஷ்ட வழக்கு தொடுத்தார்கள் என்றால் நான் என்னிடத்தில் இருக்கும் ஆதாரங்களை வெளியிடுவேன். அதை நீதிமன்றத்தில் சமர்பிப்பேன். தமிழ் திரையுலகில் இந்த அளவுக்கு கொக்கைன் புழங்க காரணம் ஒரு முன்னணி நடிகர் தான் காரணம். அவர் இப்போது துபாயில் இருக்கிறார். அவரது சென்னை வீடு பூட்டியே தான் உள்ளது. அந்த வீட்டில் ரெய்டு நடத்தினால் கொக்கைன் கிடைக்க வாய்ப்புள்ளது.

Singer Suchitra Recent Interview About kollywood Drug Case She talks Evidence against Celebrities
Photo Credit:

ஸ்ரீகாந்த் பலி ஆடு: தமிழ்நாடு காவல்துறை இதனை விடுவதாக இல்லை. இந்த வழக்கில் மெயின் குற்றவாளியைப் பிடிப்பதில் தமிழ்நாடு காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதில் பலி ஆடு போல மாட்டிக் கொண்டது நடிகர் ஸ்ரீகாந்த் மட்டும்தான். நடிகர் கிருஷ்ணாவுக்கு கொஞ்சம் அரசியல் இன்ஃபுளியன்ஸ் உள்ளதால், அவர் இதிலிருந்து வெளிவர அதிக வாய்ய்புகள் உள்ளது. ஒரு மூத்த இயக்குநருக்கு அவரது இயக்கத்தில் நடித்த நடிகை ஒருவர் தான் முதன் முதலில் இந்த கொக்கைனை அறிமுகம் செய்து வைத்தார்.

நோ சொன்ன நடிகர்கள்: அதே நடிகையை அரவிந்த் சாமி மற்றும் அர்ஜுன் ஆகியோர் மிரட்டி விட்டார்கள். இதுபோல இனிமேல் எங்களிடம் பேச வேண்டும் என்று கடிந்து கொண்டார்கள். இந்த வழக்கு விசாரணை முடிவில் பல பெரிய பெரிய நடிகர்கள் நடிகைகள், இயக்குநர்கள் சிக்குவார்கள். மற்றொரு நடிகை விநியோகித்து வருகிறார். அவர் இதனை அதிக அளவில் பயன்படுத்துவதில்லை. தனக்கு நெருக்கமானவர்களுக்கு உயர்ரக கொக்கைனும் மற்றவர்களுக்கு தரம் தாழ்ந்த கொக்கைனும் அவர் விநியோகித்து வருகிறார்" என்று அந்த பேட்டியில் சுசித்ரா தெரிவித்துள்ளார். சுசித்ராவின் இந்த பேட்டி பலரையும் திடுக்கிடச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X