Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பார்வையற்ற பாடகர் திருமூர்த்திக்கு கொரோனா பாஸிட்டிவா? தீயாய் பரவும் தகவல்.. சோகத்தில் ரசிகர்கள்!
சென்னை: இளம் பாடகரான திருமூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளி திருமூர்த்தி.
இயற்கையிலேயே பாடும் திறன் மற்றும் நல்ல குரல் வளத்தை கொண்ட திருமூர்த்தி பல பாடல்களை அடி பிசறாமல் பாடி வருகிறார்.
ஹானஸ்ட்டா சொல்றேன்.. கொஞ்சம் கூட வொர்த் இல்லை.. பிக்பாஸ் 4 போட்டியாளர்களை பங்கம் பண்ணிய மீம்!
ஷேரான வீடியோ
அந்த வகையில் விசுவாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை அப்பகுதி மக்களிடம் பாடி காண்பித்தார். இதனை தங்களின் செல்போனில் படம் பிடித்த அப்பகுதி இளைஞர்கள் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தனர்.
வாய்ப்பு கொடுத்த இமான்
அந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்களை பெற்றதோடு பெரும் வைரலானது. அதனை பார்த்த இசையமைப்பாளர் டி இமான், அவரை தொடர்பு கொள்ள உதவுமாறு கேட்டார். இதனைத் தொடர்ந்து திருமூர்த்தி இமானை சந்தித்தார். அதற்கு பலனாக ஜிப்ஸி படத்தில் இடம்பெற்ற செவ்வந்தியே மதுவந்தியே பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது திருமூர்த்திக்கு.
கொரோனா உறுதி
கடந்த 6 மாதங்களாக கொரோனா லாக்டவுனால் திருமூர்த்தி வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி திருமூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சோகத்தில் ரசிகர்கள்
அந்த மையத்தில் திருமூர்த்தியுடன் ஏராளமானோர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் திருமூர்த்தி பாடல்களை பாடி வருவதாகவும் கூறப்படுகிறது. தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள போதும் மற்றவர்களை உற்சாகப்படுத்தி வரும் திருமூர்த்தியை பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் கொரோனா தொற்றில் இருந்து அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்றும் பிரார்த்தித்து வருகின்றனர்.