Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பாடகர்கள் அதிகம் பேசக் கூடாது - கே ஜே யேசுதாஸ்
பாடகர்கள் ரொம்பப் பேசக் கூடாது. பாடுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் நல்லது, என்றார் கே ஜே யேசுதாஸ்.
கே ஜே யேசுதாஸ் சினிமாவில் பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி அவருக்கு பாராட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் திரையுலகிலிருந்து பலரும் வந்து கலந்து கொண்டு யேசுதாஸை வாழ்த்தி வணங்கினர்.
இயக்குநர்கள் எஸ் பி முத்துராமன், பாக்யராஜ், பார்த்திரன், பாடகிகள் பி சுசீலா, எஸ்பி ஷைலஜா, சுஜாதா, நடிகைகள் பி சரோஜாதேவி, பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா, ரேவதி, இசையமைப்பாளர்கள் தேவா, வித்யாசாகர், சங்கர் கணேஷ், பாடலாசிரியர் இயக்குநர் கங்கை அமரன், நடிகர் தனுஷ், அவர் மனைவி ஐஸ்வர்யா உள்பட பலரும் பங்கேற்றனர்.
விழாவில் ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் நட்சத்திரங்கள் அவரை வாழ்த்தினர். பதிலுக்கு யேசுதாஸும் பேசினார்.
அவர் பேசுகையில், "பொதுவா பாடகர்கள் அதிகம் பேசக்கூடாது. பாடுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் நல்லது.
நான் என்னை ஒரு போதும் வித்வானாக நினைத்ததில்லை. இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் மாணவனாகத்தான் நினைக்கிறேன்.
ஒவ்வொரு அரிசியிலும் ஒருவர் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்பார்கள். அப்படித்தான் ஒவ்வொரு பாடலும் இன்னாருக்குத்தான் என்று எழுதப்பட்டிருக்கும். எனவே, அந்தப் பாடல் தனக்கு கிடைக்கவில்லையே என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை. அவரவருக்கான பாடல் தானாகவே கிடைக்கும்.
அய்யோ இந்தப் பாடல் எனக்கு கிடைக்காமல் போயிடுச்சேன்னு நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை," என்றார்.
நிகழ்ச்சியில் யேசுதாஸின் மனைவி பிரபாவும் கலந்து கொண்டார். யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் பல பாடல்களைப் பாடினார்.