Don't Miss!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாடகர்கள் அதிகம் பேசக் கூடாது - கே ஜே யேசுதாஸ்
பாடகர்கள் ரொம்பப் பேசக் கூடாது. பாடுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் நல்லது, என்றார் கே ஜே யேசுதாஸ்.
கே ஜே யேசுதாஸ் சினிமாவில் பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி அவருக்கு பாராட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் திரையுலகிலிருந்து பலரும் வந்து கலந்து கொண்டு யேசுதாஸை வாழ்த்தி வணங்கினர்.
இயக்குநர்கள் எஸ் பி முத்துராமன், பாக்யராஜ், பார்த்திரன், பாடகிகள் பி சுசீலா, எஸ்பி ஷைலஜா, சுஜாதா, நடிகைகள் பி சரோஜாதேவி, பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா, ரேவதி, இசையமைப்பாளர்கள் தேவா, வித்யாசாகர், சங்கர் கணேஷ், பாடலாசிரியர் இயக்குநர் கங்கை அமரன், நடிகர் தனுஷ், அவர் மனைவி ஐஸ்வர்யா உள்பட பலரும் பங்கேற்றனர்.
விழாவில் ஒவ்வொரு பாடலுக்கு முன்பும் நட்சத்திரங்கள் அவரை வாழ்த்தினர். பதிலுக்கு யேசுதாஸும் பேசினார்.
அவர் பேசுகையில், "பொதுவா பாடகர்கள் அதிகம் பேசக்கூடாது. பாடுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் நல்லது.
நான் என்னை ஒரு போதும் வித்வானாக நினைத்ததில்லை. இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் மாணவனாகத்தான் நினைக்கிறேன்.
ஒவ்வொரு அரிசியிலும் ஒருவர் பெயர் எழுதப்பட்டிருக்கும் என்பார்கள். அப்படித்தான் ஒவ்வொரு பாடலும் இன்னாருக்குத்தான் என்று எழுதப்பட்டிருக்கும். எனவே, அந்தப் பாடல் தனக்கு கிடைக்கவில்லையே என்று யாரும் வருத்தப்படத் தேவையில்லை. அவரவருக்கான பாடல் தானாகவே கிடைக்கும்.
அய்யோ இந்தப் பாடல் எனக்கு கிடைக்காமல் போயிடுச்சேன்னு நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை," என்றார்.
நிகழ்ச்சியில் யேசுதாஸின் மனைவி பிரபாவும் கலந்து கொண்டார். யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் பல பாடல்களைப் பாடினார்.