Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரபுதேவா படத்தில் சிங்கள நடிகை: இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு
பிரபுதேவா இயக்கும் இந்தி படமான ராமைய்யா வஸ்தாவையா என்ற படத்தில் சிங்கள நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். அவர் சில காட்சிகளில் வருவதோடு ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். பிரபுதேவாவின் படத்தில் ஒரு சிங்கள நடிகையை நடிக்க வைப்பதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழர்களை படுகொலை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை அரசின் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக நாடுகள் வற்புறுத்தி வருகின்றன.
பிரபாகரனின் மகன் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இதே போன்ற பாலகனான, தன் மகனை இழந்த பிரபு தேவாவுக்கு இந்த வலி நிச்சயம் தெரிந்திருக்கும்.
இந்நிலையில் இலங்கையிலிருந்து நடிகையை அழைத்து வந்து தன் படத்தில் பிரபுதேவா நடிக்க வைப்பது மன்னிக்க முடியாதது. இலங்கை நடிகையை படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.